ஞாயிறு, 24 மே, 2015

மெகர் பாபா

Meher Baba
மெகர் பாபா:
1894ல் பூனாவில் பிறந்தவர்; பார்சி பெற்றோருக்கு 2-வது மகனாகப் பிறந்தார்; தனது 19 வயது வரை எல்லோரையும் போலவே இயல்பான சிறுவனாகவே கல்வி கற்று வந்தார்; ஒருநாள், பாபாஜான் என்ற முஸ்லீம் பெண்மணியை சந்தித்தார்; அவர் ஒரு பெண் சாமியார்; திடீரென்று இந்த சிறுவனை அருகில் அழைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்; அப்போதிலிருந்து இந்த சிறுவனுக்கு ஏதோ இனம்புரியாத எண்ண ஓட்டங்கள்; தொடர்ந்து ஐந்து சத்திய குருமார்களான, தாஷூதீன் பாபா, நாராயண் மகராஜ், ஸ்ரீடி சாய்பாபா, உபஷ்னி மகராஜ் ஆகியவர்களின் இடங்களைச் சென்று தரிசித்து ஆசி பெற்றார்; அதுமுதல் "மெகர் பாபா" என்று அவரின் பக்தர்களால் அழைக்கப்பட்டார்; சில வருடங்கள் கழித்து பேசுவதையே தவிர்த்து விட்டார்; எழுதிக் கொடுப்பது, கை சைகை மூலமே தனது எண்ணத்தை தெரிவித்தார்; எல்லா மொழிப் புலமையும் பெற்றவர்; கவிதைகள் சொல்லுவதிலும் வல்லவர்; ஹபீஸ், ஷேக்ஸ்பியர், ஷெல்லி இவர்களின் கவிதைகள்  அத்துபடி;

நானே கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டார்; வெளிநாடுகளுக்கு சென்று இவரின் கொள்கைகளைப் பரப்பினார்; அமெரிக்காவில் நியூயார்க் நகரில் "Message to Ameriaca" என்ற பிரசங்கத்தை 1000 வார்த்தைகளில் வெளிப்படுத்தினாராம்; மகாத்மா காந்தியை அரசியலிலிருந்து ஒதுங்கிவிடும்படி கேட்டுக் கொண்டதாக அவரின் சிஷ்யர்கள் சொல்லிக் கொள்வார்கள்; காந்தியும் இந்த மகர்பாபாவும் ஒரே கப்பலில் (1931-ல்) பிரயாணம் செய்தார்கள்; இருவரும் கப்பலிலேயே சந்தித்து பேசிக் கொண்டனராம்;


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக