திங்கள், 18 மே, 2015

உன் கடவுள் உன்னை காப்பாற்றுவாரா?

"The Monk's Tale" is one of The Canterbury Tales by it author Geoffrey Chaucer: ஜெப்ரி சாசரின் கான்டர்பரி கதைகளில் ஒன்றுதான் இந்த "சாமியாரின் கதை." இது 1385ல் எழுதப்பட்ட கதை (சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பொக்கிஷம்);

சாமியார் சொல்கிறார், "யாருமே கண்ணை மூடிக்கொண்டு அதிர்ஷ்டத்தை நம்பிக் கொண்டிருக்க கூடாது; அதிர்ஷ்டம் என்பதே நிலையற்றதுதான்; அது மாறிக்கொண்டே இருக்கக் கூடியதுதான் என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்" என்று சாமியார் சொல்கிறார். "Not to trust in blind prosperity but be aware that Fortune is fickle and ever-changing."
சாமியார் ஒவ்வொரு கதையாகச் சொல்லிக் கொண்டே செல்கிறார்;
அடுத்த கதையாக....
Nabugodonosor நபுகாடனேசர்:  
தான்தான் என்ற அகங்காரத்தில் அழிந்த மன்னர்;
இவர் பாபிலோனிய மன்னர்; இரண்டுமுறை இஸ்ரேலை போரில் தோற்கடித்தவர்; இவரின் கதையை அந்த சாமியார் சொல்கிறார்;
"தொங்கு தோட்டம்" என்னும் Hanging Gardens of Babylon இதை உருவாக்கியவர் இவர்தான்; (உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்று); இப்போது ஈராக் பகுதியில் உள்ளது; இவரின் ஆசைநாயகி அமிடிஸ் ராணிக்காக உருவாக்கப்பட்டதாம்! ஏனென்றால், அந்த ராணி, அவள் பிறந்து வளர்ந்த ஊரில் நிறைய தோட்டம் துரவுகளுடன் வாழ்ந்தவள்; இங்கு அப்படி ஒன்றுமே இல்லை என்று கவலைப்பட்டாளாம்; அதனால் மன்னர் இதை அவளுக்காக உருவாக்கியுள்ளார்;
நபுகடனேசர் என்றால் அந்த ஊர் மொழியில் "கடவுளே, என் முதல் குழந்தையை காப்பாற்று" என்று பொருளாம். இவரின் தகப்பனாருக்கு இவர்தான் மூத்த பிள்ளை; எனவே இந்தப் பெயரை இவருக்கு வைத்து விட்டார் இவரின் தந்தை; பக்கத்து நாடான சிரியாவையும் (அரமியா), எகிப்தையும் பிடிக்கும் ஆசையில் அடிக்கடி போர் தொடுப்பார்;
இவருக்கு அடிக்கடி பயங்கர கனவு வருமாம்! கனவில் ஏதேதோ வந்து தொலைக்குமாம்! காலையில் எழுந்தவுடன் அரண்மனை அமைச்சர்களை கூப்பிட்டு இந்த கனவுகளுக்கு என்ன அர்த்தம், எதை சொல்ல வருகிறது என்று கேள்வி கேட்டு துளைத்து எடுத்துவிடுவாராம்! திருப்தியான பதிலாக இல்லையென்றால் சிறை அல்லது தலை போய்விடும்!
ஒருநாள் கனவில், "ஒரு பெரிய சிலை; அதன் தலை முழுவதும் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, களிமண் இருக்கிறது; ஒரு மலையிலிருந்து ஒரு பெரிய கல் பெயர்த்துக் கொண்டு வந்து இந்த சிலையை உடைத்து விட்டது; உடைந்த சிலையே பெரிய மலைபோல ஆகிவிட்டது; இதற்கு விளக்கம் கேட்டு தன் மதகுரு டேனியலிடம் கனவை சொல்கிறார்; அவரும் நம் கடவுளிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி, "அந்த பெரிய சிலை நான்கு தொடர்ச்சியான ராஜாங்கத்தை குறிக்கிறது; மன்னரான உங்களிலில் இருந்து இது ஆரம்பிக்கிறது; இவை எல்லாமே கடவுளின் இராஜாங்கத்தால் அடித்து தரை மட்டமாகிறது" என்கிறார்; இதை கேட்ட மன்னர், டேனியலை முதன்மை பதிவுக்கு உயர்த்துகிறார்; டேனியலுக்கு பெரிய பதவி கிடைத்தது அவருடன் இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை; டேனியல் கடவுள் பக்தி மிக அதிகமாக உள்ளவர்; எப்போதும் சாமியை கும்பிட்டுக் கொண்டே இருப்பார்; எனவே தந்திரம் செய்து மன்னரை நம்பவைத்து ஒரு உத்தரவை மன்னராகவே பிறப்பிக்க வைக்கின்றனர்; அதாவது, "இன்றுமுதல் 30 நாட்களுக்கு நாட்டு மக்கள் யாரும் சாமியை கும்பிடக்கூடாது"  என்று அரசரின் உத்தரவு; ஆனால் டேனியலால் சாமி கும்பிடாமல் இருக்க முடியவில்லை; சாமி கும்பிடுவதை மன்னருக்கு சொல்லிவிட்டார்கள்; உடனே அவர் டேனியலை சிங்கத்தின் குகைக்குள் தூக்கி போடச் சொல்கிறார்; உன் கடவுள் உன்னை காப்பாறுவாரா பார்க்கலாம் என்கிறார்; மறுநாள் காலை வந்து பார்க்கிறார்; சிங்கம் டேனியலை ஒன்றும் செய்யவில்லை; எப்படி இது என்று மன்னர் கேட்கிறார்; நாம் வணங்கும் கடவுள், அந்த சிங்கத்தின் வாயைக் கட்டிப் போட்டுவிட்டார்; அதனால் நான் தப்பித்தேன் என்று டேனியல் கூறுகிறார்; அதை மன்னர் நம்புகிறார்;
மன்னர் நெபகாட்னேசர், ஒரு பெரிய கடவுள் சிலையை முழுக்க தங்கத்தால் செய்கிறார்கள்; அதை பொதுமக்களின் வழிபாட்டுக்கு வைக்கிறார்கள்; அங்கு மூன்று யூதர்கள் வருகிறார்கள்; அவர்களை அதை வணங்க மறுக்கிறார்கள்; மன்னர், கோபத்தில் அந்த மூன்று யூதர்களையும் எரியும் எண்ணெய் கொப்பரையில் போட கட்டளையிடுகிறார்; ஆனால் அவர்கள் எரியாமல் ஒரு புகைகூட இல்லாமல் வெளியே வருகிறார்கள்; மன்னர் உடனே "இவர்கள்தான் கடவுளின் மகன்கள்"  என்றும், இவர்களின் கடவுள்தான் உண்மையான கடவுள் என்றும், எல்லோரும் இவரையே வணங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்களை கை கால்களை வெட்டிவிடுவேன் என்றும் உத்தரவு இடுகிறார்;
நெபுகாட்னேசருக்கு கனவு வருகிறது: அதில் வானளாவிய மரம்; இதை மந்திரியிடம் கேட்கிறார்; அதற்கு அவர், "மன்னரே தாங்கள் ஒரு ஏழு வருடத்திற்கு பைத்தியக்காரராக திரியப் போகிறீர்கள் என்பதை கனவு சொல்கிறது" என்று கூறுகிறார்;
கடவுளுக்காக எவ்வளவு செய்திருக்கிறேன், எனக்கு பைத்தியம் பிடிக்காது என்று இருக்கிறார்; நினைவை இழக்கிறார்; மிருகம்போல ஏழு வருடங்கள் பைத்தியமாக திரிகிறார்; ஒரு சிறையில் மிருகம் போல வாழ்கிறார்; பின்னர் பைத்தியம் தெளிகிறது; அகங்காரம் ஒழிந்து கடவுளை தன்னடக்கத்துடன் வழிபட்டு வருகிறார்;

**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக