வெள்ளி, 15 மே, 2015

"இனி உன்னை எங்கும் அனுப்பமாட்டேன் மகளே!"

மன்னர் ஆலா போர்முனையிலிருந்து திரும்பி நாட்டுக்கு வந்துவிட்டார். தன் கோட்டைக்கு வருகிறார். தன் மனைவியையும் புதிதாகப் பிறந்த மகனையும் தேடுகிறார். எங்கே அவர்கள்? இதைக்கேட்ட பாதுகாவலன் இதயம் உறைகிறது! இவன் உடனே மன்னர் எழுதியிருந்த கடிதத்தை காண்பிக்கிறான். "பிரபுவே! நீங்கள் கடிதத்தில் ஆணையிட்டிருந்தபடி நான் அவர்களை கொன்றுவிட்டேன்." என்று கூறுகிறான்.

கடித்தை எடுத்துச் சென்ற வீரனிடம் முழுமையான விசாரனை.... என்ன நடந்தது என்று தெரிந்துவிட்டது மன்னருக்கு. தன் தாயே தவறு செய்திருக்கிறாள். தாயே ஆனாலும் இராஜதுரோகத்துக்கு மரண தண்டனையே தீர்ப்பு. தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. தாய் ட்னகில்டு கதை முடிந்தது.

மன்னர் சோகத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். யாரும்அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாத சோகம்! எந்த நாவும் விளக்க முடியாத சோகமும் அதுவே! No tongue may describe the grief that King Alla felt for his wife and child. மனைவியையும் ஆசை மகனையும் நினைத்து நினைத்து உருகுகிறார் மன்னர்.

மனைவி கான்டன்ஸ் உப்புக்கடலில் மிதந்து . .. .  மிதந்து . .. ..  ஒரு கரையில் ஒதுங்கிவிட்டாள். அங்கு ஒரு அரண்மனை கோட்டை. எந்த ஊர் எந்த நாடு என்று பெயர் தெரியவில்லை. காற்று அடித்து சேர்த்த இடம். அவளும் மகனும் படகை விட்டு மணலில் இறங்குகிறார்கள். ஓ! கடவுளே! மறுபடியும் காட்டுவாசிகள் ஊரா? அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் வந்து சேர்ந்து விட்டார்கள். வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்ணும் குழந்தையும் தனியே படகில்! ஆச்சரியம்! பொழுது இருட்டி விட்டது! பண்ணைவீட்டு கணக்கப்பிள்ளை வருகிறார். அவனுடன் துரதிஷ்டமும் சேர்ந்தே வருகிறது. அதிகாரத்துடன் வந்தவன் விசாரனை என்ற பெயரில் படகில் ஏறிக் கொள்கிறான். சோதனை செய்ய வேண்டுமாம். இருட்டை பயன்படுத்தி அவளை நெருங்குகிறான். குழந்தை அழுகிறது. தப்பித்தாள். அவள் அழுகிறாள்..... மேரி மாதா! உதவியை அனுப்புகிறாள் மேரி மாதா! கணக்கப்பிள்ளை இருட்டில் படகிலிருந்து தட்டுத்தடுமாறி தவறி தண்ணீரில் விழுந்து விட்டான்.

மறுபடியும் படகு உப்புக்கடலில் மிதக்கிறது. வடக்கு காற்று வீசுகிறது. படகு வடக்கே போகிறது. மேற்கே காற்று. இப்போது மேற்கே பயணம். சிலநேரம் கிழக்கே காற்று.... கிழக்கே .... எந்த திசை போகவில்லை? எல்லாத் திசையும் போகிறது..... ஏசு கிறிஸ்துவின் தாய் மேரி மாதா எது சரியான இடம் என நினைக்கிறாரோ அங்கு கொண்டு செலுத்துகிறார் படகை. காற்று வெறும் திசைமாற்றி மட்டுமே!
**
இளவரசி கான்டன்ஸ், தான் பிறந்த ரோம் நகரில் அவளின் தந்தை ரோமானியச் சக்கரவர்த்தி. தன் மகளை ஆசையுடன் சிரியா மன்னரான சுல்தானுக்கு மனைவியாக அனுப்பி வைத்தார். என்னவாயிற்று மகளுக்கு? தேடுவார்தானே! சிரியாவுக்கும் ரோமுக்கும் கடிதங்களை பறந்து கொண்டிருந்தன. ரோமானிய கப்பல் சென்ற சிரியா நாட்டில், எல்லா ரோமானிய கிறிஸ்தவர்களும் வெட்டிக் கொல்லப்பட்டனர் என்றும், தன் மகளுக்கு சுல்தானின் தாய் வஞ்சகம் செய்துவிட்டார் என்றும் கடிதங்கள் கூறுகின்றன. பலிவாங்க, ரோமானிய சக்கரவர்த்தி தன் வீரர்களை சிரியாவுக்கு அனுப்பிவிட்டார். சென்றவர்கள் சிரியா நாட்டை துவச்சம் செய்துவிட்டனர். சக்கரவர்த்திக்கு துரோகமா? ம்.....

இளவரசி கான்டன்ஸ் உடைந்த படகில் உப்புக் கடலில் மகனுடன். அவள் ரோம் நாட்டைவிட்டுப் பிரிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டனவாம். அவளை அந்தப் பகுதி கவர்னர் பார்க்கிறார். அந்த பெண் யார் என்றே தெரியவில்லை. எதற்காக இந்த படகில் இவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவளிடம் கேட்டால், அவள் பெயரைக்கூட சொல்ல மறுக்கிறாள். வேறு வழி தெரியாத கவர்னர் அவளையும் அவளின் மகனையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வருகிறார். அங்கு தன் மனைவியிடம் விஷயத்தை சொல்லி ஒப்படைக்கிறார். அவரின் மனைவி கான்ஸ்டன்ஸை அன்புடம் பார்த்துக் கொள்கிறார். அந்த வீட்டிலேயே அவளும் வேலை செய்து வருகிறாள்.
ரோமானியச் சக்கரவர்த்தியின் மகளான இளவரசி, இப்போது வீட்டுவேலைக்காரி..... காலத்தின் கொடுமை.

மன்னர் ஆலா, மனம் உடைந்து, மனைவியையும் மகனையும் காணாது தவித்துத் திரிகிறார். மனைவியின் நினைவாக ரோம் நாட்டுக்குச் சென்று போப் ஆண்டவரைப் பார்த்து மனம்விட்டு பாவ மன்னிப்பு கேட்டு, ஏசுகிறிஸ்துவின் பூரண மன்னிப்பை பெற வேண்டும் என நினைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. ரோம் நாட்டுக்கு ஆலா மன்னர் வருகை அறிவிக்கப்படுகிறது. ரோம் நாட்டில் அங்குள்ள கவர்னர் இந்த ஏற்பாட்டை முன்னின்று நடத்தும்படி ரோமானிய சக்கரவர்த்தி உத்தரவு. இந்த கவர்னர்தான் அந்த வேலையை செய்ய வேண்டும். மற்றொரு நாட்டு மன்னர் வரும்போது இதெல்லாம் பாரம்பரிய பழக்க வழக்கமாம். ஆலா மன்னரை வரவேற்று மதிப்பளித்து தங்க வைக்கிறார்.  இரண்டு மூன்று நாட்கள் செல்கின்றன. ஆலா மன்னருக்கும் ரோம் கவர்னருக்கும் நட்பு ஏற்படுகிறது. ஆலா மன்னர், தான் ஒரு விருந்து கொடுப்பதாகவும் அதில் கவர்னரும் அவரின் உறவுகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

மன்னர் ஆலாவின் விருந்து நடக்கிறது. அதற்கு கவர்னர் தன் மனைவி மக்களுடன், தன் வீட்டில் வேலைபார்க்கும் இந்த இளவரசி கான்டன்ஸின் இளம் மகனையும் அழைத்துச் செல்கிறார்.

விருந்து நடக்கிறது. மன்னர் ஆலா இந்த சிறுவனையே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். கவர்னரிடம் கேட்கிறார், "யார் இந்தச் சிறுவன்? இவ்வளவு அழகாக இருக்கிறானே? என் மனம் அவனிடமே செல்கிறதே?" என்று கேட்கிறார். கவர்னரோ, "இவன் என் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன். வேறு விபரம் எனக்குத் தெரியவில்லை மன்னரே! இவனுக்கு தாய் இருக்கிறாள்; ஆனால் எனக்குத் தெரிந்து, இவனுக்கு தகப்பன் யார் என்று தெரியவில்லை" என்று கூறுகிறார். அந்தச் சிறுவனோ அவனின் தாயைப் போலவே முகஜாடையில் இருக்கிறான். ஆலா மன்னர் இவனை பார்க்கிறார். ஏதோ மனம் சொல்கிறது. அமைதியாகிறார். சாப்பாட்டு மேஜையை விட்டு எழுந்துவிட்டார். வரண்டாவுக்கு வருகிறார். யோசனை.... யோசனை......  மண்டைக்குள் பாதாளக் குழி . .. . . இல்லையில்லை என் மனைவி உப்புக்கடலில் மூழ்கி இருப்பாள்! . . .. ... ..  இல்லையில்லை . .. . .. அவள் தப்பிப் பிழைத்திருப்பாள். . . .. . . ஒருவேளை இந்த நாட்டுக்கு கரை ஒதுங்கி இருந்திருந்தால் . . .. .. . .

விருந்து முடிகிறது....ஆலா மன்னர், கவர்னருடன் கவர்னரின் வீட்டுக்குச் செல்கிறார்.
மன்னர் ஆலா தன் வீட்டுக்கு வருகிறார் என்றதும், கவர்னர் பறபறக்கிறார்! வரவேற்பு நடைபெறுகிறது. அந்த வரவேற்பில் இளவரசி கான்டன்ஸூம் இருக்கிறார். மன்னர், கான்டன்ஸைப் பார்த்து விட்டார். ஓ! என் மனைவி கான்டன்ஸ் உயிருடன் இருக்கிறார்! மன்னரின் கன்னத்திலிருந்து கண்ணீர் வழிகிறது. அவளுக்கு பல சந்தேகம்! தன்னை விரட்டி விட்ட கணவன், இப்போது எப்படி அழமுடியும்? அவன் அன்பை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா? தர்மசங்கடம்! மன்னருக்கே நிலைகொள்ளாநிலை! மயக்கியே விழும் நிலைக்கு போய்விட்டார். அழுதுகொண்டே தன் பழைய நிலையை எடுத்துச் சொல்கிறார். "எல்லாக் கடவுளும், தேவைகளும் என்மீது இரக்கம் கொள்வீர்களாக! நான் தவறு செய்யவில்லை! நான் உன்னை தவிக்கவிடவில்லை! அந்த எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததுமில்லை! நான் அவ்வாறு தவறு செய்திருந்தால், இப்போதே என்னை  நரகத்தில் போடட்டும்! கதறுகிறார்!
அவளுக்கும் இரக்கம் வந்துவிட்டது! மன்னரின் கண்ணீரில் உண்மை இருக்கத்தான் செய்யும்! அவள் போராட்டத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை! இந்த சோகத்தை எழுத்தில் எழுதமுடியாது!
முடிவாக, அவள் தன் கணவனை மன்னித்து ஏற்றுக் கொண்டாள். இருவரும் முத்தமிட்டுக் கொண்டார்கள். இந்த பூமி உருவானதிலிருந்து இதுவரை எவருமே இப்படி ஒரு அன்பை பொழிந்திருக்க முடியாது; அதுபோலவே இனி இந்த பூமி முடிவுக்கு வரும்வரை யாரும் இப்படியொரு அன்பை பகிர்ந்திருக்க போவதுமில்லை! Joy of heaven!

கான்டன்ஸ், தன் தகப்பன்தான் இந்த நாட்டின் மகாசக்கரவர்த்தி. ரோமானிய சக்கரவர்த்தியிடம் நீங்கள் மருமகனாக வந்து விருந்தில் கலந்து கொள்ள விருப்பமா என்று கேட்கிறாள். கணவனும் சம்மதிக்கிறான். தன் மகனையும் அழைத்து செல்கிறார்.
விருந்துக்குப் போகும்வரை, ரோமானிய சக்கரவர்த்திக்கு, ஆலா மன்னரின் மனைவிதான் தன் மகள் என்று தெரியாது. இளவரசி கான்டன்ஸ் தன் தகப்பனாரான ரோமானிய சக்கரவர்த்தியை நேருக்கு நேர் பார்க்கிறாள். தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை! சக்கரவர்த்தியின் மகள், இப்படி அவள் வாழ்வில் இழுப்பட்டிருக்கு தேவையில்லை! விதி! கடவுளின் செயல்! எல்லாத் துயரமும் மனதில் தோன்றி மறைகிறது. அவளால் பொறுக்க முடியவில்லை! அப்பா!!!!! தந்தையின் காலில் விழுந்து கதறுகிறாள். "தந்தையே! நான்தான் உங்களின் சின்னஞ்சிறிய மகள் கான்ட்னஸ்.  "Father!' she cried. 'You have forgotten your young child Constance! I am your daughter whom you sent to Syria. It is I, who was put in the salt sea and left to die! Mercy, father! I beg you, please do not send me to any more heathen lands, but thank my lord here, instead, for his kindness.'
கணவருடன் இங்கிலாந்து சென்று அங்கு கணவன் , மகன் இவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறாள். சில வருடங்களில் கணவர் இறந்து விடுகிறார். ஆம். காலதேவன் தன் வசூலைச் செய்து கொண்டான்.
மறுபடியும் கான்டன்ஸ், தன் தந்தையின் ரோம் நாட்டுக்கே திரும்புகிறாள். தன் தந்தையின் காலில் விழுகிறாள். தந்தை ஆறுதல் சொல்லி தன்னுடனே வைத்துக் கொள்கிறார்.

"இனி உன்னை எங்கும் அனுப்பமாட்டேன் மகளே!"

புயலுக்குப்பின்னே அமைதி! சோகங்களுக்குப் பின்னும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யும். அவள் தன் இளமைகால சிநேகிதிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள். இனி அவள் இந்த பூமியில் இருக்கும்வரை, கடவுள் அவளுக்கு துன்பத்தை கொடுக்க மாட்டான் என்றே நம்புவோம். ஆமென்!


 **

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக