"The Monk's Tale" is one of The
Canterbury Tales by it author Geoffrey Chaucer:
ஜெப்ரி
சாசரின் கான்டர்பரி கதைகளில் ஒன்றுதான் இந்த "சாமியாரின்
கதை." இது 1385ல் எழுதப்பட்ட கதை
(சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட
பொக்கிஷம்);
லூசிபர் விடிவெள்ளி ஆகாயத்திலிருந்து
மண்ணில் விழுந்த சோகக் கதையை கேட்டீர்கள்;
கடவுளின் முதல் மனிதன்
ஆதாம்,
கடவுள் சொன்ன சொல்லைக் கேட்காததால், இந்த மண்ணில்
படும் அவஸ்தையை பார்த்திருப்பீர்கள்;
இனி, அடுத்த கதையாக, இரகசியத்தை காப்பாற்றி வைக்காமல் அதனால்
உயிரிழந்த மாவீரன் Samson-சாம்சனின்
சோகக் கதையை கேளுங்கள்;
சாம்சன் என்றால் கெப்ரூ
மொழியில் "சூரியமனிதன்" என்று பொருள்; அவன்
கடவுள் அருள் பெற்றவன்; ஒரு சிங்கக் கூட்டத்தையே தான் ஒருவனே
சண்டையிட்டு அதன் தாடைகளைக் கிழித்துவிடுவான்; ஒரு போர்படையே
வந்தாலும், தன் கையில் வைத்திருக்கும் கழுதையின் ஒரு தாடை எலும்பைக்
கொண்டே எல்லோரையும் கதறக் கதற அடித்து விரட்டுவான்; ஆனால் அப்படிப்பட்ட
வீராதி வீரனுக்கு இரண்டு விஷயங்கள் ஆகாது; ஒன்று, நம்பிக்கைக்கு உகந்தவள் அல்லாத பெண்களைப் பார்த்தால் மயங்கி விடுவான்;
இரண்டு, இவன் மயிரைப் பிடுங்கி விட்டால் இவன் உயிரே
போய்விடும்.
அந்தக் காலத்தில், பிலிஸ்டைன் மக்களிடம், இஸ்ரேல் மக்கள் அடிவாங்கி அவதிப்
பட்டுக் கொண்டிருந்தார்கள்; அந்த இஸ்ரேல் மக்களை காப்பாற்றுவதற்காக,
ஏஞ்சல் தேவதை தோன்றி அங்கு வசிக்கும் மோனவா என்பவனின் மனைவியிடம் பேசுகிறார்.
அந்த மோனவா மனைவிக்கோ வெகுகாலம் குழந்தை ஏதும் பிறக்கவில்லை; அந்தக் கவலையில் இருக்கிறாள்; தேவதை, "உனக்கு வீரமான மகன் பிறப்பான்; அவனே இந்த இஸ்ரேல் மக்களை,
பிலிஸ்டைன் மக்களின் தொல்லைகளிலிருந்து காப்பாற்றுவான்" என்று கூறி
மறைகிறது; அதை அவள் கணவன் வந்தவுடன் சொல்கிறாள்; அவனோ அதை நம்ப மறுக்கிறான்; "மறுபடியும் அந்த தேவதை
வந்தால் என்னை நேரில் பாத்து சொல்லச் சொல்" என்று நம்பிக்கை இல்லாமல் சொல்கிறான்;
அந்த தேவதை ஏற்கனவே அவளிடம்
சொல்லியுள்ளது, "பிறக்கும் உன் மகன் எந்தக் காரணத்தைக்
கொண்டும், போதைதரும் மதுவை அருந்தக் கூடாது; எந்தக் காரணத்தைக் கொண்டும் அவனின் முடியை வெட்டிக் கொள்ளக்கூடாது" என்றும்
ஆணை;
மகன் பிறந்தவுடன், மனோவா, மகனுக்கு மொட்டை போட கோயிலுக்கு போகிறான்;
ஆனால் தேவதை ஆட்களை அனுப்பி தடுத்துவிடுகிறது; தேவதை ஆகாயத்தில் தோன்றி, "நான் வெறும் தேவதை என்று
நினைத்துக் கொண்டாயா? நானே கடவுள்" என்று சொல்கிறது;
அதைக் கேட்ட மனோவா பயப்படுகிறான்; "கடவுளைப்
பார்த்த எவரும் உயிருடன் இருக்க முடியாதாமே! அப்படியென்றால், நான் இறந்துவிடுவேனா?" என்று பயப்படுகிறான்; ஆனால், அவன்
மனைவி ஆறுதலாகச் சொல்கிறாள்; "கடவுள் நம்முடனேயே தங்கி இருக்க
போகிறார்; எனவே அவர் நம்மை ஒன்றும் செய்யமாட்டார்" என்று
சமாதானம் செய்கிறாள்;
சிறுவன் சாம்சன் வளர்ந்து
பெரியவனாகிறான்; இஸ்ரேலை விட்டு, பிலிஸ்டைன்
நாட்டுக்குப் போகிறான்; அங்கு திம்னா என்ற பெண்ணைப் பார்த்து
காதல் கொள்கிறான்; அவளையே திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறான்;
கடவுளிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்வோம் என பெற்றோர் சொல்வதை சாம்சன்
கேட்கவில்லை; அந்த பெண்ணை தேடி அங்கு போகிறான்; வழியில் ஒரு பெரிய சிங்கம் எதிர்கொள்கிறது; அதை வெகு
எளிதில் தூக்கி எறிகிறான்; அதன் வாயைப் பிளக்கிறான்; எலும்புகளை பிய்த்து எறிகிறான்; அவனுக்கு அந்த பலத்தை
கடவுள் கொடுத்திருக்கிறார் எனத் தெரியும்; எனவே வேறு யாருக்கும்
அந்த ரகசியத்தைச் சொல்லாமல் தன்னகத்தே இரகசியமாகவே வைத்துக் கொள்கிறான்; பிலிஸ்டனை நாட்டில் அந்த மணப்பெண்ணின் வீட்டுக்குப் போகிறான்; திருமணம் செய்து அவளை கூட்டிக் கொண்டு இஸ்ரேல் திரும்புகிறான்; வழியில், அவன் அடித்ததுப் போட்ட சிங்கத்தின் எலும்புக்
கூடுகளில், தேனீக்கள் கூடுகட்டி தேனடை பெரிதாக இருக்கிறது;
முழுவதும் தேன்; தானும் மனைவியும், புது மனைவியுடன் கூட வந்த பிலிஸ்டைன் நாட்டு சொந்தக்காரர்களும் தேனை வயிறு
நிறைய குடிக்கிறார்கள்; வீட்டுக்கும் பெற்றோருக்கு எடுத்துக்
கொண்டு வருகிறான்;
வீட்டுக்கு வருகிறான்; மாப்பிள்ளை விருந்து இரவில் நடக்கிறது; மணப்பெண்ணுடன்
வந்திருந்த 30 பேர்களிடம் இவன் ஒரு விடுகதையை சொல்கிறான்; அதற்கு
விடை சொல்ல வேண்டும் என்றும்; அவ்வாறு விடை சொல்லிவிட்டால்,
எல்லோருக்கும் தனித்தனியே பட்டாடைகளை பரிசாகத் தருவதாகவும், அவ்வாறு சொல்ல முடியாமல் தோற்றுவிட்டால், அவர்கள் அனைவரும்
இவனுக்கு பட்டாடைகளைத் தர வேண்டும் என்றும்
கட்டளையிடுகிறான்;
விடுகதை இதுதான்:
"தேனைக் காட்டிலும்
சுவையானது எது?"
"சிங்கத்தைக் காட்டிலும் பலசாலி எது?"
"What is sweater than honey?
and what is stronger than a lion?"
நீங்கள் அனைவரும் என்னுடைய
நிலத்தில் என மாட்டைக் கொண்டு உழுதுவந்தால், இதற்காக விடை
உங்களுக்குக் கிடைக்கும்" என்று சொல்கி அதுவரை வேலை செய்யச் சொல்கிறான்;
விருந்தாளிகள், விடையை கண்டுபிடிக்க முடியவில்லை; மெதுவாக மணப் பெண்ணிடம்
வந்து கெஞ்சுகிறார்கள்; நீ உன் கணவனிடம் இரகசியமாகக் கேட்டு எங்களுக்குச்
சொல்லிவிடு" என்று கேட்டுக் கொள்கிறார்கள்;
மறுநாள் இரவில் மனைவி
இந்த ரகசியத்தை கணவனிடமிருந்து தெரிந்து கொண்டு, விருந்தாளிகளிடம்
சொல்லி விடுகிறாள்; அவர்களும் விடையைச் சொல்லிவிட்டார்கள்;
அது அவனுக்கு கோபத்தை உண்டாக்கியது; விருந்தாளிகளைக்
கொன்றுவிட்டான்; மனைவியை கோபமாக இழுத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்குப்
போய் விட்டுவிட்டான்; பின்னர் அவளை பார்க்க மாமனார் வீட்டுக்குப்
போகிறான்; ஆனால் அவளை
வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்; மாமனார்
சொல்கிறார், "என் இரண்டாவது பெண் இருக்கிறாள்; அவளை வேண்டுமானால் திருமணம் செய்து கொள்ளுங்கள் மருமகனே" என்கிறார்;
இவனுக்கோ பயங்கரக் கோபம்; எல்லா நரிகளையும் பிடிக்கிறான்;
அதன் வாலில் தீப்பந்தங்களை ஏற்றி விரட்டி விடுகிறான்; அவைகள் ஊரையே சுற்றி வருகின்றன; ஊரே எரிந்துவிட்டது;
பயிர்கள் எல்லாம் எரிந்து விட்டன; அதில் அவன் மனைவயும்,
அவன் மாமனாரும் எரிந்து போயினர்; "எனக்குத்
துரோகம் செய்யவர்களுக்கு நான் துரோகம் செய்து விட்டேன்" என்று ஆறுதல் சொல்லிக்
கொண்டான்;
"I have done to them
what they did to me."
சாம்சன் ஓடிப் போய் மலைக்
குகைக்குள் ஒழிந்து கொண்டான்; மன்னர், 3000 வீரர்களை அனுப்பி அவனை சிறைப்பிடித்து வரச் சொல்கிறார்; அவர்கள் இவனை பெரிய கயிறு கொண்டு கட்டினார்கள்; அவனை
அதை சுலபமாக அறுத்து எரிந்தான்; கையில் வைத்திருந்த கழுதையின்
தாடை எலும்பை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு ஒரு ஆயிரம் வீரர்களை கொன்று போட்டான்;
பின்னர் தப்பித்து கஜா
நாட்டுக்குப் போனான்; அவன் மறுபடியும் வருவான் என்று
பிலிஸ்டைன் நாட்டு வீரர்கள் காத்திருந்தனர்; அங்கு, கஜா நாட்டில் ஒரு பெண்ணைப் பார்த்து மயங்கி விட்டான்; (இரகசியம் காக்கமுடியாத பெண்களை கண்டாலே இவனுக்கு மயக்கம் வந்துவிடும் என்பது
இவனது சபலம், பலவீனம், அதுவே இவனின் விதி);
அவள் பெயர் "டெலிலா." இந்தச் செய்தி எதிரிகளான பிலிஸ்டைன்
வீரர்களுக்கு தெரியவருகிறது. அவர்கள் இரகசியமாக இந்தப் பெண் டெலிலாவை அணுகி,
அவளுக்கு 1100 வெள்ளிக்காசுகள் தருவதாகவும், அதற்குப்
பதிலாக, அவனுக்கு எதில் பலவீனம் உள்ளது என்று தெரிந்து சொல்லும்படி
கேட்டுக் கொள்கிறார்கள்; (மனைவி என்னும் பொறியை வைத்தே கணவனைப்
பிடிக்கிறார்கள்; கணவனின் பலவீனம், மனைவியைத்
தவிர வேறு யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை); சாம்சன் சல்லாபத்தில்
ஈடுபடும்போதெல்லாம் மனைவி இந்த விஷயத்தை கேட்கிறாள்; அவன் சொல்லாமல்
மழுப்புகிறான்; ஆனாலும் பொய்யாக சிலவற்றைச் சொல்கிறான்;
"நான் தூங்கும்போது என்னை நீ, வில்லின் கயிற்றால்
கட்டி விட்டால், அத்துடன் என்னால் எழுந்திருக்கவே முடியாது"
என்று கூறுகிறான்; அப்படி கட்டிப்போட்டாள்; அவன் எழுந்து விட்டான்; அவள் பல வழிகளைக் கையாண்ட பின்னர்,
அவனே ஒருநாள் உண்மையைச் சொல்லிவிட்டான்: "என் முடியில் தான் என்
உயிர் இருக்கிறது."
சாம்சன் தலைமுடியை ஏழு
பின்னல்களாகப் போட்டிருப்பான்; மனைவி டெலில்லா தன் வேலைக்காரனைக்
கூப்பிட்டு அந்த ஏழு பின்னல்களையும் வெட்டிவிடச் சொல்கிறாள்; வெட்டிய முடியுடன் சான்சன்; தேவதையின் உத்தரவை மீறிவிட்டான்;
உடனே தேவதை அவனைவிட்டுச் சென்றுவிட்டது;
தகவல் எதிரி பிலிஸ்டைன்
வீரர்களுக்குப் போகிறது; வந்து கொத்தாக சாம்சனை கைது செய்து
தூக்கிச் செல்கிறார்கள்; அவனின் கண்களை நோண்டி விட்டார்கள்;
கண்தெரியவில்லை; கஸா சிறையில் அடைக்கிறார்கள்;
கடினமாக மாவு அரைக்க விடுகிறார்கள்; பால் கடையும்
செக்கை இழுக்க விடுகிறார்கள்;
பிலிஸ்டைனில் ஒரு கோயில்
பண்டிகை;
சாம்சனை காட்டிக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லும் திருவிழா அது;
சாம்சனையும் அங்கு இழுத்து வர வேண்டும்; அதை பார்ப்பதற்கு
ஏகப்பட்ட கூட்டம்; கூரைகளில் ஏறி நிற்கிறார்கள்; அவன் கோயிலுக்குள் இழுத்தவரப்படுகிறான்; இவ்வளவு நாள்
ஆகிவிட்டதால், அவனுக்கு மறுபடியும் மயிர் முளைத்துவிட்டது;
ஒரு தூணில் கட்டுகிறார்கள்;
கடவுளின் சாம்சன் வேண்டுகிறான்;
"கடவுளே என்னை மன்னித்துவிடு! என்மீது இரக்கம் காட்டு கடவுளே! இப்போது
ஒரே ஒருமுறை மட்டும் அந்த பலமான சக்தியை எனக்குக் கொடு; அதைக்
கொண்டு, எனது கண்களைப் பறித்துக் கொண்ட எனது எதிரிகளை துவச்சம்
செய்து கொள்கிறேன்; அதற்குப்பின் எனக்கு எந்தப் பலமும் வேண்டும்;"
கோபக் கனலுடன், தான் கட்டியிருக்கும் தூணை இழுக்கிறான்; ஒவ்வொரு கையும்
ஒரு தூணை இழுக்க அது பெயர்ந்து விழுகிறது;
"இந்த பிலிஸ்டைன்
எதிரிகளுடன் சேர்ந்தே நானும் சாகிறேன்" கத்துகிறான்;
அவனும் இறந்து விட்டான்; அவன் உடலை அவனின் வீட்டார் எடுத்துக் கொண்டு வந்து அவனின் தகப்பன் மனோவாவின்
கல்லறைக்கு அருகிலேயே புதைக்கிறார்கள்; டெல்சோரா மலையில் இந்த
கல்லறைகள் உள்ளன;
எவ்வளவு பெரிய வீரனாக
இருந்தாலும், கடவுளின், தேவதையின்
துணை இருந்தாலும், தன் ரகசியத்தை தானே காப்பாற்றி வைத்துக் கொள்ள
வேண்டும். பிறரிடம் சொல்லக் கூடாது;
தான் பெரிய வீரன், தன்னை யாராலும் ஒன்றுமே செய்யமுடியாது என்று அகந்தையாகவும் இருக்கக் கூடாது;
இருந்தால், இந்த சோகம்தான் நிகழும்;
(இராவணன் கதை மாதிரியே
இருக்கிறதே! அவரும் பலசாலி, கடவுள் (சிவனின்) அருள் பெற்றவர்;
யாராலும் தோற்கடிக்க முடியாத மாவீரன், மகாசக்கரவர்த்தி;
ஆனாலும் ஒரேயொரு பலவீனம்; அவரின் பலவீனம் அவரின்
கால் பெருவிரலில் இருக்கிறது; அதை தெரிந்து கொண்டுதானே அவரைப் போரிலே
கொல்ல முடிந்தது; அவரின் ஆட்கள்தானே அதை காட்டிக் கொடுத்திருக்க
முடியும்?)
வீரனே ஆனாலும் கர்வத்தில்
தன் பலவீனம் வெளிப்பட்டே தீரும்!
**