ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

அரசுப் பள்ளிகள்

அலகாபாத் ஐகோர்ட் ஒரு அதிரடியாக தீர்ப்பை கொடுத்துள்ளதாம். 

எல்லா அரசு ஊழியர்களும் அவர்களின் குழந்தைகளை கண்டிப்பாக அரசு பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டுமாம். தவறினால் அவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். ஆறு மாத கால அவகாசம் கொடுத்துள்ளது ஐகோர்ட். 

இப்போது அங்கு மூன்று வகையான பள்ளிப் படிப்புகள் உள்ளதாம். இங்க்லீஸ் மீடியம் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் என மூன்று வகை உள்ளதாம். 

அரசு ஊழியர்கள் அனைவரும் அவர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால், அரசுக்கு வருமானம் வருவதுடன், கல்வியின் தரமும் தானே உயர்ந்துவிடுமாம். 

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

ஷ்பானிஸ் மொழி (Spanish)

Spanish language
ஷ்பானிஸ் மொழி (Spanish):
இது ஸ்பெயின் நாட்டின் கேஸ்டைல் (Castile region of Spain) பகுதியில் பேசிவந்த மொழி என்பதால் இதை கேஸ்டிலியன் (Castilian) என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். உலக மக்களில் மிக அதிகமாகப் பேசப்படும் மொழி. துல்லியமான கணக்கெடுப்பின்படி, சைனாவின் ‘மாண்ட்ரின் மொழி” க்கு அடுத்து இந்த ஷ்பானிஸ் மொழிதான் பேசப்படுவதாக சொல்லப்படுகிறது. உலக நாடுகளில், சுமார் 20 நாடுகளில் இந்த ஷ்பானிஸ் மொழி பேசப்படுகிறது. 470 மில்லியன் மக்கள் இந்த ஷ்பானிஸ் மொழியை அன்றாடம் பேசி வருகின்றனராம். (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்; 470 மில்லியன் என்பது 47 கோடி மக்கள்). தமிழ்மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை (வெளிநாட்டில் இருப்பவர் உட்பட சுமார் 80 மில்லியன் தமிழ் மக்கள் மட்டுமே. அதாவது 8 கோடி; தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 7.5 கோடி).
பிரான்ஸ் நாட்டுக்கு தெற்கே உள்ள நாடு ஸ்பெயின் நாடு. இதைத்தான் முன்னர் கேஸ்டைல் நாடு என்பர். இங்குள்ளவர்கள் தென்-மேற்கே சென்று தென் அமெரிக்காவை ஆண்டுவந்தனர். ஆகவேதான் தென் அமெரிக்க மக்கள் ஸ்பெயின் நாட்டின் (காஸ்டைல் நாட்டின்) கேஸ்டைல் மொழியான ஷ்பானிஷ் மொழியை பேசிவந்தனர். அதுவே தென்அமெரிக்கர்களின் தாய்மொழியானது.
மெக்ஸிகோ நாடு முழுக்க ஷ்பானிஸ் மொழி பெசும் மக்கள் தான். அமெரிக்காவின் தென்பகுதியில் ஷ்பான்ஸ் மொழி பேசுபவர்கள் அதிகம். அமெரிக்கா செல்லும் தமிழர்களுக்கும் ஷ்பானிஸ் மொழி தெரிந்திருந்தால் நல்லதுதான். பிரான்ஸ் நாட்டிலும் ஒரு 4% மக்கள் ஷ்பானிஸ் மொழி பேசுகிறார்கள்.


அர்ஜென்டினா (Argentina)

Argentina
அர்ஜென்டினா (Argentina):
அமெரிக்க கண்டம் என்பது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்ற இரண்டு நிலப்பகுதிகள். இதில் வட அமெரிக்கா என்பது வடக்கே கனடா நாடும், தெற்கே யு.எஸ்.ஏ. என்ற யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா, சுருக்கமாக ஸ்டேட்ஸ் என்னும் பிரபல்யமான அமெரிக்க நாடும் கொண்டது.
தென் அமெரிக்கா என்பது பல நாடுகள் சேர்ந்த நிலப்பரப்பு. இங்கு பெரும்பாலும் லத்தீன் நாட்டின் மொழியான ஷ்பானிஸ் மொழியே பேசுவதால் இந்த நாட்டை பொதுவாக ‘லத்தீன் அமெரிக்கா’ என்றே செல்லமாக அழைப்பர்.
இந்த தென்அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள நாடுகளில் பெரிய நாடே இந்த அர்ஜென்டினா. உலக நாடுகளில் எட்டாவது பெரிய நாடு இது. கிட்டத்தட்ட 28 லட்சம் கி.மீ. பரப்பளவு கொண்டநாடு. (இந்தியாவின் நிலப்பரப்பு சுமார் 33 லட்சம் கி.மீ கொண்டது). இங்கே முழுக்க முழுக்க ஷ்பானிஸ் மொழி (Spanish) பேசுபவர்கள்தான். ஷ்பானிஸ் மொழி கிட்டத்தட்ட இங்லீஷ் மொழி சாடைதான் இருக்கும்.
அர்ஜென்டினாவை “சில்வர் நாடு” (வெள்ளி தேசம்) என்பர். அர்ஜென்டினா என்ற பெயரே வெள்ளி என்றுதான் பெயர். சில்வரின் கெமெஸ்ட்ரி பெயர் (இரசாயனப் பெயர்) அர்ஜென்டம். வெள்ளி என்பதன் லத்தீன் மொழி அர்ஜென்டம்.
இந்த அர்ஜென்டினாவின் தலைநகர் “பூனஸ் ஏரிஸ்” (Buenos Aires). இது மிகப்பெரிய நகரம்.  இந்தப் பெயரும் இதற்கு வேடிக்கையாகவே வந்தது. பூனஸ் ஏரிஸ் என்ற லத்தீன் வார்த்தைக்கு “ப்யூர் ஏர்” அல்லது “சுத்தமான காற்று” என்று பொருள். ஷ்பானிஸ் மாலுமிகள் இந்த மண்ணுக்கு முதன்முதலில் கப்பல் மூலம் வந்து இறங்கியபொது “நல்ல காற்று அவர்களை இங்கு கொண்டுவந்து சேர்த்தாக” அந்த பெயரையே இதற்கும் வைத்து விட்டார்களாம்!
இந்த நாட்டில் 1810ல் ஏற்பட்ட “மே மாதப் போராட்டம்” சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது. 1816ல் சுதந்திரம் பெற்றது. சூரியன் போட்ட கொடி வைத்துள்ளார்கள். (இந்தியாவில் அந்த இடத்தில் அசோக சக்கரம் இருக்கும்).
அர்ஜென்டினா நாடு, ‘புட்பால்’ என்னும் கால்பந்து விளையாட்டில் உலகப் புகழ் பெற்றது. இதில் சுமார் 125 வருடங்களுக்கு மேலான அனுபவம் கொண்ட நாடு. இருபதுக்கும் மேற்பட்ட உள்நாட்டு குழுக்களைக் கொண்டது. பிபா என்னும் FIFA  என்னும் உலக கால்பந்து விளையாட்டு குழுவிலும் உள்ளது. இரண்டுமுறை கால்பந்து உலகக் கோப்பையும் பெற்றுள்ளது.

வியாழன், 4 ஜூன், 2015

The Clerk's Tale:

The Clerk's Tale: கிளர்க்கின் கதை;
கான்டர்பரி கதைகளில் இதுவும் ஒன்று; 3000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதைகள் இவை; மிகப் பிரபலமான கதைகளும் இவைகள்தான்;

இவன் திருமணம் ஆகாத பேச்சிலர்; வால்டர் என்று பெயர்; ஊரில் இருப்பவர்கள் எல்லாம், 'இவனை, ஒரு திருமணம் செய்து கொண்டு ஒரு வாரிசை பெற்றுக் கொள்: அதுதான் உனக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; இவனுக்கும் அதுவே சரியென்று பட்டது;

ஒருநாள், கிராமத்திலுள்ள ஒரு ஏழைப் பெண்ணை போய் பார்க்கிறான்; அவள் அன்றாடம் கூலி வேலைசெய்து வயிற்றுப்பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறாள்; அவளிடம் பேசுகிறான்; அவன் அவளுக்கு வாழ்க்கை அளிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கேட்கிறான்; அவளும் ஒப்புக் கொள்கிறாள்; தான் ஒரு சிறந்த மனைவியாக இருந்து அவனுக்கு உதவுவதாகவும் கூறுகிறாள்;

திருமணம் நடக்கிறது; மனைவி பெயர் கிறிசல்டா; பின்னர் ஒரு மகள் பிறக்கிறாள்; மகள் பிறந்தவுடன் அவளை சோதித்து பார்க்க நினைக்கிறான்; ஒரு ஆபீஸர் போன்ற தோற்றமுடைய ஒரு ஆளை அனுப்பி வைக்கிறான்; வந்தவன், இவன் மனைவியிடம் சென்று அந்த குழந்தையை உன் கணவர் வாங்கிக் கொண்டுவரும்படிகேட்கிறார் என்று சொல்கிறான்; அதை எங்கோ கொண்டு செல்லப் போகிறாரகள் என்றும் சந்தேகமாகச் சொல்கிறான்; அவள், பயந்து கொண்டு, கணவனுக்கு கொடுத்த வாக்குப்படி, சொன்ன பேச்சை தட்டாமல் குழந்தையை கொடுக்கிறாள்; ஆனால் ஒரு வேண்டுகோளை வைக்கிறாள்; "நீங்கள் குழந்தையை கொன்றுவிட்டால், அதை சரியான முறைப்படி அடக்கம் செய்யவேண்டும்" என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள்; ஆனாலும் அவர்கள் இந்த பெண் குழந்தையை ரகசியமாக வேறு ஒரு இடத்தில் வைத்து வளர்க்கிறார்கள்: காலப்போக்கில் அவளுக்கு மறுபடியும் கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள்; அதேபோலவே, ஆள் அனுப்பி அந்தக் குழந்தையையும் கொடுத்துவிடும்படி கேட்டு அனுப்புகிறான்; (சந்தனு மகாராஜாவுக்கும் கங்காதேவிக்கும் பிறக்கும் எல்லாப் பிள்ளைகளையும் மனைவி கங்கையில் விட்டுவிடுவாள்; கணவனான மன்னர் எதிர்த்து கேட்கமுடியாது; அப்படி அதில் தப்பித்த ஒரு குழந்தைதான் பீஷ்மர் என்று மகாபாரதக் கதை உண்டு);


அப்படியே கணவனின் பேச்சை தட்டாமல் குழந்தையை கொடுக்கிறாள்; இன்னும் சோதித்து பார்க்க நினைக்கிறான்; அவளை விவாகரத்து செய்து வெளியேற்றுகிறான்; அவன் வேறு திருமணம் செய்து கொள்ளப் போகதாக சொல்கிறான்; அதுவரை இருந்து அந்த புதுப் பெண்ணுக்கு தோழியாக இருந்து உதவி வேலை  செய்யும்படி கேட்கிறான்; அந்த புதுப் பெண்ணுக்கு, தான் ஏற்கனவே தூக்கிக் கொண்டு போன தன் மகளை அன்பாகக் கொடுக்கிறான்; உடனே மனைவிக்கு தன் மகள் உயிருடன் இருப்பதாக தெரிந்து விடுகிறது; சந்தோஷம் தாங்க முடியவில்லை; இரண்டாவது பிறந்த மகனும் வருகிறான்; தாயைப் பார்க்கிறான்; தன் கணவன் பொய்யாக இதை செய்திருப்பது அவளுக்கு தெரியவருகிறது; பின்னர் இருவரும் மகிழச்சியுடன் வாழ்கிறார்கள்; அவள் பொறுமைக்கு கிடைத்த பரிசுகள்

The Cook's Tale

ஜெப்ரி சாசர் எழுதிய கதைகள்தான் இந்த கான்டர்பரி கதைத் தொகுப்புகள் -The Canterbury Tales; இவைகள் எழுதப்பட்டது 1300ம் வருடங்களில்; இந்த கதைகள்மூலம் வாழ்க்கைப் பாடங்களை கற்றுக் கொடுத்திருப்பார்;

அதில் ஒரு கதைதான் The Cook's Tale -சமையற்காரரின் கதை:
சமையற்காரரின் பெயர் பெர்கின்ஸ்; ஆள் குள்ளமாக இருந்தாலும், கறுத்தமுடி, நன்றாக டான்ஸ் ஆடுவார்; அவர் டான்ஸைப் பார்ப்பதற்கு ஆட்கள் கூடிவிடுவார்கள்; சமையற்கலையிலும் வல்லவர்; இருந்தாலும் வேறு ஒரு சமையற்கார முதலாளியிடம் வேலைக்காரராக இருக்கிறார்டான்ஸ் ஆடுவதற்காக குடிப்பார்; கொஞ்சம் அதிகமாகவே குடிப்பார்;

ஒருநாள், முதலாளி இவரைக் கூப்பிட்டு, இப்படி ஒரு கேள்வியை (விடுகதை மாதிரி) கேட்கிறார்; "It is better to take the rotten apple out of the bag than to have it rot all the other apples." ஒரேயொரு அழுகிய ஆப்பிளை பையிலிருந்து தூக்கி எறிவதைக் காட்டிலும், அதை பையிலேயே வைத்துக் கொண்டு மற்ற ஆப்பிள்களையும் அழுக வைப்பது புத்திசாலித்தனம் அல்ல."

அவனுக்கு புரிந்துவிட்டது; நாம் தண்ணி அடித்துக் கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டு திரிவது அவருக்கு பிடிக்கவில்லை; வேலையை விட்டு போகச் சொல்கிறார் என புரிந்து கொண்டு, வணக்கம் குட் பை முதலாளி என்று சொல்லி புறப்படுகிறான்; வழியில் ஒரு நண்பன் மாட்டுகிறான்; அவனும் குடிகாரன்தான்; அவன் சூதாடவும் செய்வான்; அவைகள்தான் அவனுக்கு பிடித்த வாழ்க்கையும் கூட; அவனுக்கு ஒரு மனைவி; அவள், பேருக்கு ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கிறாள்; உண்மையில் அந்த வியாபாரத்தை பார்க்க மாட்டாள்; வெளி ஆண்களுடன் பழகி பணம் சேர்ப்பாள்; விபச்சாரி;

இத்துடன் கதை முடிகிறது;

கான்டர்பரி கதைகளை எழுதிய சாசர்  அவர்கள் இந்த கதையை மட்டும் இந்துடன் முடித்திருக்கிறார்; வேண்டுமென்றே முடித்தாரா அல்லது பின்னர் எழுதலாம் என நினைத்து விட்டுவிட்டாரா என்று இதுவரை தெரியவில்லையாம்; அடுத்து கதை எப்படி போயிருக்கும் என்பதை யாராலும் யூகிக்கவும் முடியவில்லையாம்.

ஞாயிறு, 24 மே, 2015

மெகர் பாபா

Meher Baba
மெகர் பாபா:
1894ல் பூனாவில் பிறந்தவர்; பார்சி பெற்றோருக்கு 2-வது மகனாகப் பிறந்தார்; தனது 19 வயது வரை எல்லோரையும் போலவே இயல்பான சிறுவனாகவே கல்வி கற்று வந்தார்; ஒருநாள், பாபாஜான் என்ற முஸ்லீம் பெண்மணியை சந்தித்தார்; அவர் ஒரு பெண் சாமியார்; திடீரென்று இந்த சிறுவனை அருகில் அழைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்; அப்போதிலிருந்து இந்த சிறுவனுக்கு ஏதோ இனம்புரியாத எண்ண ஓட்டங்கள்; தொடர்ந்து ஐந்து சத்திய குருமார்களான, தாஷூதீன் பாபா, நாராயண் மகராஜ், ஸ்ரீடி சாய்பாபா, உபஷ்னி மகராஜ் ஆகியவர்களின் இடங்களைச் சென்று தரிசித்து ஆசி பெற்றார்; அதுமுதல் "மெகர் பாபா" என்று அவரின் பக்தர்களால் அழைக்கப்பட்டார்; சில வருடங்கள் கழித்து பேசுவதையே தவிர்த்து விட்டார்; எழுதிக் கொடுப்பது, கை சைகை மூலமே தனது எண்ணத்தை தெரிவித்தார்; எல்லா மொழிப் புலமையும் பெற்றவர்; கவிதைகள் சொல்லுவதிலும் வல்லவர்; ஹபீஸ், ஷேக்ஸ்பியர், ஷெல்லி இவர்களின் கவிதைகள்  அத்துபடி;

நானே கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டார்; வெளிநாடுகளுக்கு சென்று இவரின் கொள்கைகளைப் பரப்பினார்; அமெரிக்காவில் நியூயார்க் நகரில் "Message to Ameriaca" என்ற பிரசங்கத்தை 1000 வார்த்தைகளில் வெளிப்படுத்தினாராம்; மகாத்மா காந்தியை அரசியலிலிருந்து ஒதுங்கிவிடும்படி கேட்டுக் கொண்டதாக அவரின் சிஷ்யர்கள் சொல்லிக் கொள்வார்கள்; காந்தியும் இந்த மகர்பாபாவும் ஒரே கப்பலில் (1931-ல்) பிரயாணம் செய்தார்கள்; இருவரும் கப்பலிலேயே சந்தித்து பேசிக் கொண்டனராம்;


FRS பட்டம்

Fellow of the Royal Society (FRS):

இங்கிலாந்து மன்னர் 2-ம் சார்லஸ், 1660ல் இந்த சொசைட்டியை உருவாக்கினார்; விஞ்ஞான அறிவாளிகள், எஞ்சினியர்கள், இதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவர்; இந்த உறுப்பினர்களுக்குப் பெயர்தான் 'பெலோ' 'Fellow"  இது ஒரு கௌரவ பட்டம் போல கொடுக்கப்படும்; இங்கிலாந்து, காமன்வெல்த் நாடுகள் இவைகளிலிருந்து தேர்தெடுத்து இந்தப் பட்டத்தைக் கொடுப்பர்; இந்த உலக்குக்கு உபயோகப்படும் விஞ்ஞான செயல்களை செய்திருப்பவர்களுக்கு கொடுக்கப்படும்;ஒவ்வொரு வருடமும் 52 பேர்கள் இவ்வாறு புதிய பெல்லாக்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்; இப்போதுவரை மொத்தம் 145- பெல்லோக்கள் இதில் இருக்கிறார்கள்;


இதில், பெல்லோ பட்டம் பெற்ற முதல் இந்தியர் Ardaseer Cursetjee (Wadia): இவர் பார்சி; இவர் இந்திய கப்பல் கட்டும் எஞ்சினியர் ஆவார்; இவரின் 22 வது வயதில் இவரின் தகப்பனாரின் கம்பெனியில், இவருடைய மேற்பார்வையில் 60 டன் எடை கொண்ட கப்பலை தயாரித்து கடலில் மிதக்கவிட்டவர்இது நடந்தது 1822-ல் பம்பாயில்; பல கண்டுபிடிப்புகளை கண்டவர்; 1841ல் இவருக்கு பெல்லோ பட்டம் FRS வழங்கி கௌரவிக்கப்பட்டதாம்;