நன்றே
வருகினும், தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும்
இல்லை;
உனக்கே பரம்; எனக்கு உள்ளவெல்லாம்
அன்றே
உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமான் பெற்ற கோமளமே!
(அபிராமி அந்தாதி – பாடல்-95)
(நல்லதே நடந்தாலும், தீமையுமே விளைந்தாலும் நான் அறிவது
ஒன்றுமே இல்லை. எல்லாம் உன்னையே சேரும். எனக்கு உள்ளதெல்லாம் உன்னுடையே என்று அன்றே உனக்கு அளித்து விட்டேன்.
அழியாத குணக்குன்றே, அருட்கடலே, இமவான் பெற்று எடுத்த கோமளமே!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக