சனி, 8 செப்டம்பர், 2018

நான் அறிவது ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம்;


நன்றே வருகினும், தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம்; எனக்கு உள்ளவெல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமான் பெற்ற கோமளமே!

(அபிராமி அந்தாதி பாடல்-95)

(நல்லதே நடந்தாலும், தீமையுமே விளைந்தாலும் நான் அறிவது ஒன்றுமே இல்லை. எல்லாம் உன்னையே சேரும். எனக்கு உள்ளதெல்லாம் உன்னுடையே என்று அன்றே உனக்கு அளித்து விட்டேன். அழியாத குணக்குன்றே, அருட்கடலே, இமவான் பெற்று எடுத்த கோமளமே!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக