விரும்பித்
தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித்
ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து,
சுரும்பிற்
களித்து,
மொழி தடுமாறி, முன் சொன்னவெல்லாம்
தரும்பித்தவர்
ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.
(அபிராமி அந்தாதி – பாடல்-94)
(விரும்பி உன்னைத் தொழும் அடியார்கள் கண்களில் நீர் பெருகி, உடல் மயிர் கூச்செறிந்து புளகாங்கிதம் அடைந்து, அறிவு
இழந்து, மதுக்குடித்த வண்டு போலாகி, மொழி
தடுமாறி, முன்னர் சொன்னவை எல்லாம் நிகழ்வித்தவர் ஆவர் என்றால்,
அதற்கு மூலகாரணம் அபிராமியின் சமயம் நன்றே!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக