சனி, 1 செப்டம்பர், 2018

குழையத் தழுவிய கொன்றை அந் தார் கமழ் கொங்கைவல்லி!

குழையத் தழுவிய கொன்றை அந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையப் பொருத திரு நெடும் தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருக் கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே.
(அபிராமி அந்தாதி பாடல் 100)

(இளம் தளிரும் கொன்றைப் பூக்களும் கலந்த தொடுத்த மாலையின் மணம் கமழும் கொங்கைவல்லி! மூங்கில் போன்ற நெடும் தோள்களும், கரும்பு வில்லும், காண்பவர்கள் விரும்பும் மலர் அம்பும், வெண்மையான புன்னகையும், மான் போன்று மருண்ட கண்களும், நெஞ்சில் எப்போதும் தோன்றுகிறதே!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக