ஞாயிறு, 17 ஜூலை, 2016

நையாயிகர்


நையாயிகர் (சித்தும் சடமும்)
இவர்கள் கௌதம மதவாதிகள்; இவர்களின் தத்துவம் மற்ற மதங்களின் தத்துவங்களிலிருந்து விலகி சொல்லப்பட்டுள்ளது;
இவர்களின் மதக் கொள்கைப்படி --
சித்தும், சடமும் ஆகிய இரண்டும் நித்தியப் பொருள் (அழியாத நிரந்தரப் பொருள்) என்ற கொள்கை உடையவர்கள்;
சடமாகிய இந்த உலகம் பீஜத்தினிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதை தோற்றுவித்தது சித்துப் பொருள் என்றும், அவ்வாறு இந்த உலகம் தோன்றும் போது, பீஜம் ஒரே அணுவாகவே (ஏக அணுவாகவே) இருந்தது என்றும், பின்னர் அது இரண்டாக உடைந்து துவி அணுவாக (இரண்டு அணுவாக) பிளந்தது என்றும், பின்னர், அது திரி அணுவாக (மூன்று அணுக்களாக) பிரிந்து ஒரு வடிவம் கொண்ட பொருளாக ஆகி விட்டது என்றும் கூறுகின்றனர்;
இந்த உலகம், மறுபடியும், ஒடுங்கும் காலத்தில், அதேபோல, திரி அணுக்கள், துவி அணுக்களாகி, துவி அணுக்கள், ஏக அணுவாகி, ஒடுங்கி, பீஜமாய் நிற்கும் என்பர்;
எனவே அது அழியாத் தன்மை கொண்டது என்றும், நித்தியமாய் இருக்கிறது என்றும், வடிவம் கொண்டது என்றும், எனவே சித்தும் சடமும்  நித்தியம் என்றும், சித்தின்றி, சடம் காரியப் படாது என்றும், ஆன்மகோடிகள் என்னும் இந்த உலக உயிர்கள் எல்லாம் அந்த சித்துப் பொருளின் அம்சமே என்றும், இந்த சித்து சிறிய உயிர்களில் நிலைப்பதால், சிறிய அறிவும், சிறு தொழிலும் கொண்டு இயங்குகின்றன என்றும் கூறுகின்றனர்;
அதேபால், ஜகத்காரணமாகிய பெரிய சித்து முற்றான அறிவு கொண்டது என்றும், முற்றான தொழிலைச் செய்கிறது என்றும், கூறுகின்றனர்;
ஆன்மாக்கள், சரீரத்தோடு (உடலோடு) கூடி இருக்கும்போது, அஞ்ஞானம் உடையதாய் இருக்கிறது (ஞானம் இல்லாமல் இருக்கிறது) என்கின்றனர்; ஆனால் இந்த ஆன்மாக்கள், தன் இடையறாத முயற்சியால் ஞானத்தை அடையும்போது, அத்தகைய ஆன்மாக்கள், முழுமுதல் சித்தோடு சேர்ந்து, பேரானந்தத்தை அனுபவிக்கத் தொடங்கிறது என்றும் கூறுகின்றனர்;
(இதுதான் நையாயியர்களின் மதக் கொள்கை)
**


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக