சர்
மோனிர் வில்லியம்ஸ் (Sir Monier Williams);
ஆக்ஸ்போர்டு
யுனிவர்சிட்டி (Oxford University); இது
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு நகரில் உள்ளது; மிகப் பழைமையான யுனிவர்சிட்டிகளில்
இதுவும் ஒன்று;
இந்த
ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் சமஸ்கிருத புரபசராக இருந்தவர் சர் மோனிர்
வில்லியம்ஸ் (Sir Monier Williams);
இவர்
பம்பாயில்தான் பிறந்தவர்; இவரின் தந்தை, பாம்பே பிரசிடென்சியில் சர்வேயர்-ஜெனரலாக
வேலையில் இருந்தார்; எனவே மோனிர் வில்லியம்ஸ் பம்பாயில்தான் பிறந்தார்; பள்ளி
படிப்புக்காக இங்கிலாந்து சென்று படித்தவர்; அங்கு பள்ளி படிப்புகளை முடித்து,
பின்னர் ஆக்ஸ்போர்டில் படித்தார்; இவருக்கு திருமணம் ஆகி ஏழு குழந்தைகள்
இருந்தனர்;
ஆக்ஸ்போர்டில்
அப்போது மேக்ஸ் முல்லர் இருக்கிறார்; இந்தியாவைப் பற்றியும் இந்து கலாச்சாரத்தை
பற்றியும், சமஸ்கிருத காவியங்களைப் பற்றியும், இந்த மோனிர் வில்லியம்ஸ்க்கு
அவ்வளவாக தெரியாது என்று அவரை புரபசராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தார்; ஆனால்
மேக்ஸ் முல்லர் தான் இந்தியாவுக்கே வந்ததில்லையாம்; மோனிர் வில்லியம்ஸ் இங்கு
பம்பாயில்தான் பிறந்தவர், வாழ்ந்தவர்; ஆனாலும், ஒருவழியாக மோனிர் வில்லியம்ஸை
சமஸ்கிருத புரபசராக ஆக்ஸ்போர்டு பல்கலை நியமித்து விட்டது;
மோனிர்
வில்லியம்ஸ் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து (1875 களில்) இந்தியாவிலிருந்து
மன்னர்களை சந்தித்து நிதி உதவியும் பெற்று சமஸ்கிருத ஆராய்ச்சிக்கு இந்த
யுனிவர்சிட்டியை பயன்படுத்தினார்; இந்தியன் சிவில் சர்வீஸ் பயிற்சியும் இங்குதான்
நடந்ததாம்; இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 வரை இந்த ஆராய்ச்சி தொடர்ந்ததாம்;
மோனிர்
வில்லியம்ஸ் இந்து மத தத்துவத்தை தெளிவாக அறிந்தவர்; அத்வைத வேதாந்தமே சிறந்தது எனக்
கருதினார்;
இவர்
சமஸ்கிருத-ஆங்கில அகராதியை எழுதியவர்; அதை 1872ல் வெளியிட்டவர்;
இவர்
மகாகவி காளிதாசனின் “விக்கிரமோர்வசி” சம்ஸ்கிருத நூலையும், “சாகுந்தலா” சம்ஸ்கிருத
நூலையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டவர்; (1853ல்); இன்னும் பல பல
இந்து தத்துவார்த்த நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறிய அளித்தவர்;
ஒரு
வரியில் சொல்வதென்றால் இந்தியராக வாழ்ந்திருக்கிறார்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக