வியாழன், 4 ஜூன், 2015

The Clerk's Tale:

The Clerk's Tale: கிளர்க்கின் கதை;
கான்டர்பரி கதைகளில் இதுவும் ஒன்று; 3000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதைகள் இவை; மிகப் பிரபலமான கதைகளும் இவைகள்தான்;

இவன் திருமணம் ஆகாத பேச்சிலர்; வால்டர் என்று பெயர்; ஊரில் இருப்பவர்கள் எல்லாம், 'இவனை, ஒரு திருமணம் செய்து கொண்டு ஒரு வாரிசை பெற்றுக் கொள்: அதுதான் உனக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; இவனுக்கும் அதுவே சரியென்று பட்டது;

ஒருநாள், கிராமத்திலுள்ள ஒரு ஏழைப் பெண்ணை போய் பார்க்கிறான்; அவள் அன்றாடம் கூலி வேலைசெய்து வயிற்றுப்பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறாள்; அவளிடம் பேசுகிறான்; அவன் அவளுக்கு வாழ்க்கை அளிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கேட்கிறான்; அவளும் ஒப்புக் கொள்கிறாள்; தான் ஒரு சிறந்த மனைவியாக இருந்து அவனுக்கு உதவுவதாகவும் கூறுகிறாள்;

திருமணம் நடக்கிறது; மனைவி பெயர் கிறிசல்டா; பின்னர் ஒரு மகள் பிறக்கிறாள்; மகள் பிறந்தவுடன் அவளை சோதித்து பார்க்க நினைக்கிறான்; ஒரு ஆபீஸர் போன்ற தோற்றமுடைய ஒரு ஆளை அனுப்பி வைக்கிறான்; வந்தவன், இவன் மனைவியிடம் சென்று அந்த குழந்தையை உன் கணவர் வாங்கிக் கொண்டுவரும்படிகேட்கிறார் என்று சொல்கிறான்; அதை எங்கோ கொண்டு செல்லப் போகிறாரகள் என்றும் சந்தேகமாகச் சொல்கிறான்; அவள், பயந்து கொண்டு, கணவனுக்கு கொடுத்த வாக்குப்படி, சொன்ன பேச்சை தட்டாமல் குழந்தையை கொடுக்கிறாள்; ஆனால் ஒரு வேண்டுகோளை வைக்கிறாள்; "நீங்கள் குழந்தையை கொன்றுவிட்டால், அதை சரியான முறைப்படி அடக்கம் செய்யவேண்டும்" என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள்; ஆனாலும் அவர்கள் இந்த பெண் குழந்தையை ரகசியமாக வேறு ஒரு இடத்தில் வைத்து வளர்க்கிறார்கள்: காலப்போக்கில் அவளுக்கு மறுபடியும் கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள்; அதேபோலவே, ஆள் அனுப்பி அந்தக் குழந்தையையும் கொடுத்துவிடும்படி கேட்டு அனுப்புகிறான்; (சந்தனு மகாராஜாவுக்கும் கங்காதேவிக்கும் பிறக்கும் எல்லாப் பிள்ளைகளையும் மனைவி கங்கையில் விட்டுவிடுவாள்; கணவனான மன்னர் எதிர்த்து கேட்கமுடியாது; அப்படி அதில் தப்பித்த ஒரு குழந்தைதான் பீஷ்மர் என்று மகாபாரதக் கதை உண்டு);


அப்படியே கணவனின் பேச்சை தட்டாமல் குழந்தையை கொடுக்கிறாள்; இன்னும் சோதித்து பார்க்க நினைக்கிறான்; அவளை விவாகரத்து செய்து வெளியேற்றுகிறான்; அவன் வேறு திருமணம் செய்து கொள்ளப் போகதாக சொல்கிறான்; அதுவரை இருந்து அந்த புதுப் பெண்ணுக்கு தோழியாக இருந்து உதவி வேலை  செய்யும்படி கேட்கிறான்; அந்த புதுப் பெண்ணுக்கு, தான் ஏற்கனவே தூக்கிக் கொண்டு போன தன் மகளை அன்பாகக் கொடுக்கிறான்; உடனே மனைவிக்கு தன் மகள் உயிருடன் இருப்பதாக தெரிந்து விடுகிறது; சந்தோஷம் தாங்க முடியவில்லை; இரண்டாவது பிறந்த மகனும் வருகிறான்; தாயைப் பார்க்கிறான்; தன் கணவன் பொய்யாக இதை செய்திருப்பது அவளுக்கு தெரியவருகிறது; பின்னர் இருவரும் மகிழச்சியுடன் வாழ்கிறார்கள்; அவள் பொறுமைக்கு கிடைத்த பரிசுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக