புதன், 16 மார்ச், 2016

இங்கிலாந்து

இங்கிலாந்து
இங்கிலாந்து என்ற நாடு 10-ம் நூற்றாண்டில் உருவானதாம்; அப்போது, அங்கிருந்த மக்களுக்கு பெயர் “ஆங்கில்ஸ்”; அங்குள்ளவர்களை அதனால்தான் “ஆங்கிலேயர்” என்று அழைக்கிறோம்போல! 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே அந்த மண்ணில் மக்கள் வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்; மக்கள் வசிப்பதற்கு தகுந்த மண்ணாகவும், தட்ப-வெட்ப பகுதியாவும், இந்தப் பகுதி இருந்து வந்திருக்கிறது; இங்கிருந்த மக்கள், அதிகமாக ரோமன் மக்களுடன் வியாபாரத் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்; 7 முதல் 10-ம் நூற்றாண்டுகளில், ரோமானியர்கள், இங்கு கிறிஸ்தவ மதத்தை வேகமாகப் பரப்பி விட்டனர்; இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட போர்கள் நடந்தன; ஒரு போருக்கு நூற்றாண்டு போர் என்றே பெயர்; மன்னர்களின் அதிகாரங்களை குறைக்க மேக்ன கார்ட்டா என்ற ஒரு சட்ட உடன்படிக்கையும் ஏற்படுத்தி கொண்டனர்;
1707-ல் இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் இணைந்து ஒரே நாடாக இருக்கலாம் என்று முடிவானது; அதன் பெயர் தான் “யுனிபைடு கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டன்”; 1800-ல் அயர்லாந்தும் சேர்ந்து கொள்ள ஆசைப்பட்டது; இந்த காலக் கட்டத்தில்தான் “இங்கிலாந்து பார்லிமெண்ட்” உருவானது; அப்போது, வெஸ்ட்மின்ஸ்டர் அபே என்ற மாளிகை கட்டப்பட்டது; (The Palace of Westminster Abbey); இங்கு இங்கிலாந்தின் அரசியல் விவகாரம் அலசப்பட்டது; மன்னர் வசிப்பதற்காக தனியே, பக்கிங்காம் பேலஸ் உருவானது; (Buckingham Palace);

**

செவ்வாய், 5 ஜனவரி, 2016

வீரம் சொல்லி வருவதில்லை!

சண்டிகாரில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சின்னப் பையன், பெயர் மெகந்திரதா, 13 வயதுதான் ஆகிறது;

தன் தாயின் கழுத்தில் ஒரு கேடி கத்தியை வைத்து மிரட்டும் போது, மகன் எப்படிப் பொறுமை காப்பான்; ஆவேசத் துணிச்சலில் அந்த கத்தியை தன் கையாலேயே பறித்து எறிந்த துணிச்சலுக்கான வீரப் பதக்கத்தை பிரதமரிமிருந்து பெறுகிறான், இந்திய குடியரசு தினத்தில்;

National Bravery Award 2015 by the Indian Council for Child Welfare.

Creche கிரீச்

Creche கிரீச்கள் கட்டாயமாம்

லேபர் மினிஸ்டிரி இந்த கட்டாய கிரீச் முறையை கொண்டு வந்துள்ளதாம்; 50 தொழிலாளர்கள் இருக்கும் நிறுவனம் அல்லது 30 பெண்கள் பணிபுரியும் நிறுவனம் இவைகளில் கட்டாயம் ஒரு கிரீச் என்னும் பகல்நேர குழந்தை பராமரிப்பு நிலையத்தை வைத்திருக்க வேண்டுமாம்;

500 மீட்டர் இடைவெளியில் உள்ள பல நிறுவனங்கள் சேர்ந்தும் ஒரு கம்யூனிட்டி கீரீச் வைத்துக் கொள்ளலாமாம்; 

பஞ்சம்

பஞ்சம் இன்னும்தான் தலைவிரித்து ஆடுகிறது; இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சம்; 15 ஆயிரம் கிராமங்கள் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனவாம்; மத்திய அரசு இதற்கு நிதி உதவியாக ரூ.3,049 கோடி கொடுக்க தீர்மானித்துள்ளதாம்; மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், இதுவரை மகாராஷ்டிரா பெற்ற நிவாரண நிதியில் இதுதான் அதிகம் என்கிறார்:

இதேபோல், மற்ற மாநிலங்களிலும் பஞ்சம் உள்ளது;
மத்திய பிரதேசத்துக்கு நிதி உதவி: 2033 கோடி
கர்நாடகாவுக்கு நிதிஉதவி 1540 கோடி
சட்டீஸ்கர்க்கு 1,275 கோடி

சனி, 17 அக்டோபர், 2015

Wilson Doctrine

வில்சன் கோட்பாடு Wilson Doctrine
இங்கிலாந்து பார்லிமெண்டில் இந்த வில்சன் கோட்பாடு பின்பற்றப்படுகிறுது. இங்கிலாந்து பார்லிமெண்டில் பேசும் எம்.பி.யின் பேச்சை வைத்து அவரை வேவு பார்க்க கூடாது என்பதே இந்த வில்சன் கோட்பாடு. எம்.பி-க்கு எங்கிருந்தாவது ஒரு தகவல் வரும். அதைக் கொண்டு, அந்த எம்.பி., பார்லிமெண்டில் அந்த தகவலைத் தெரிவிப்பார். அதற்காக, அவரின் டெலிபோனை கண்காணித்து அவர் யாரிடம், எங்கிருந்து, எந்த முறையில், அந்த தகவலைப் பெற்றார் அல்லது பெறுகிறார் என வேவு பார்க்க கூடாதாம்.
இந்த வில்சன் கோட்பாடானது, Harold Wilson ஹரால்டு வில்சன் அவர்கள் இங்கிலாந்தில் 1966-ல் பிரதம மந்திரியாக இருந்தபோது, கொண்டுவரப்பட்ட கொள்கை என்பதால், அவர் பெயரை வைத்தே வில்சன் கொள்கை அல்லது வில்சன் கோட்பாடு Wilson Doctrine என்று அழைக்க ஆரம்பித்தனராம்.
அப்போது (1966ல்) இருந்த எம்.பி.க்கள் ஒரு புகாரை செய்தனர். “நாங்கள் பேசும் விபரங்களை சேகரிக்க, எங்களின் டெலிபோனை, அரசின் ரகசியப் பிரிவு ஒட்டுக்கேட்க ஆரம்பித்து விட்டது” என்று புகார். ஆனால், அப்போதைய பிரதமர் ஹரால்டு வில்சன், “அப்படிபட்ட விபரங்களை சேகரிக்கக் கூடாது” என்று இரகசிய போலிஸுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார். அதுமுதல் இதற்கு “வில்சன் கோட்பாடு” என்று பெயர்.

இப்போது இந்த பிரச்சனை வேறு உருவத்தில் வருகிறது. 2104 முதல் இதைப்பற்றி கருத்துக்கள் பறிமாறிக் கொள்ளப்படுகின்றன. வில்சன் கொள்கை என்பது 100% தடுக்கப்பட்ட கொள்கை அல்ல என்றும், ஒரு அளவுக்கு மட்டுமே அதை கடைப்பிடிக்க முடியும் என்றும் அரசு கூறுகிறது. இதற்கு எந்த சட்டமும் அங்கீகாரம் அளிக்கவில்லை என்கிறது அரசு. எனவே இதற்கு ஒரு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என அரசு நினைக்கிறது. 

மூலாதாரம்

முதுகெலும்பை வளைக்காமல் நேராக நிமிர்ந்திருக்க வேண்டியதன் அவசியம் எதற்கென்றால், சுவாசம் மூலாதாரத்தின்று புறப்பட்டு முதுகெலும்பை ஒட்டி மேலே ஓடும். பாதை நேராக இருக்கும்போது நீரும் காற்றும் விரைவாக ஓடும் இயல்பு கொண்டவை. வளைவாய் இருந்தால் வளைவுகளில் சற்றுநேரம் தடைப்பட்டு அதன்பின்னர் ஓடும். எனவேதான் முதுகெலும்பை நேராக வைத்திருக்க வேண்டும்.
வாயைத் திறக்காமல், நாக்கை உபயோகிக்காமல், உள்ளுக்குள் இருந்து வரும் சுவாசமானது "ஹம்" என்னும் ஓசையுடன் வெளியே போக வேண்டும். அவ்விதமே வெளியிலிருந்து உள்ளே செல்லும் சுவாசமானது "ஸா" என்னும் ஓசையுடன் போக வேண்டும். அவ்விதம் தினமும் பழகி வந்தால், சில தினங்களில்"ஹம்ஸா" என்ற ஓசை காதுகளில் கேட்கும். ஹம்ஸா என்னும் வார்த்தையே முன் பின் மாற்றப்படும்போது "ஸாஹம்" என வரும். இதுவே "ஸோஹம்" எனவும் "சிவோசம்" எனவும் உச்சரிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் இரண்டு கண்களையும் மூக்கு நுனியைப் பார்க்கபண்ணி, படிபடியாய், பார்வையை உள்ளே செலுத்தி ஈற்றில் முழுப்பார்வையையும் லலாட இடத்தைப் பார்க்க வேண்டுமாம். (லலாட = மூக்கு முடிவில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம்).
பார்வை இருக்கும் இடத்தில் மனம் சென்று அடையும். அப்போது சலனமில்லாத மனநிலை ஏற்படும்.
மூலாதாரம் தொடங்கி, லலாட இடம் வரை உடம்பின் பகுதிகளில், ஜீவதாதுக்கள் அடங்கிய முக்கியமான இடம் ஆறு உண்டு. அந்த ஆறையும் ஆதாரமாகக் கொண்டு அதற்கு வேறு வேறு பெயர்கள் சூட்டி உள்ளார்கள். அந்த ஆறு இடங்களிலும் சுவாசம் முக்கிய தொழிலைச் செய்கிறதாம்.
இயல்பாக, சுவாசமானது, மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு, மேலே ஓடி, நாசி வழியாக வெளியே போகிறது. வெளியே இருந்து உள்ளுக்குச் செல்லும் காற்றும் மூலாதாரத்துக்குப் போய் மீள்கிறது.
யோகிகள் படிப்படியாக காற்றை மூலாதாரத்துக்குப் போகவிடாது தடுத்து, அதற்கு மேலே உள்ள ஆதாரத்தில் நிறுத்தி, அதை மறுபடியும் அதினின்றும் திருப்பப் பண்ணுகிறார்கள். அதுமாதிரி, மேலே உள்ள ஒவ்வொரு ஆதாரத்திலும் தடுத்து, அதிலிருந்து திருப்புகிறார்கள். இப்படியாக, நாசிக்குக் கீழே உள்ள ஆதாரங்களுக்கும் போகவும், மீளவும் செய்யும் காலத்தில் சுவாசம் நாசிவழியாக போக்கு வரத்து செய்யும். நாசிக்கு மேலே போய் அந்த இடத்தில் தங்கிவிட்டால், வெளியில் இருந்து காற்று உள்ளுக்குப் போவதுமில்லை. உள்ளுக்குள் இருந்து வெளியே வருவதும் இல்லை.
உள்ளுக்குள் இருக்கும் சுவாசம் பிரம மந்திரத்துக்குப் போய் அதன் வாயிலில் மோதி திரும்புவதுண்டு. அவ்விதமான காலங்களில் அதை பழக்கி வைத்திருப்பவர்களின் நாசிகளில் சோதித்துப் பார்த்தால், சுவாசம் காணப்பட மாட்டாது. மூச்சு என்ற பேச்சே பேசப்படாது. இந்த விபரம் தெரியாதவர்கள், அவர் இறந்துவிட்டார் என்று நினைப்பர். ஆனாலும் ஜீவ நாடிகள் தளராது. உடல் உறுப்புகள் ஏதும் பழுது அடையாது. உடல் சூடு காணப்படும். இப்படி வெகு நாட்கள் இருப்பர். அவர்களை துரியாதீத நிலையில் இருப்பவர் என்பர். சிலர் இதில் வருடக்கணக்கில் இருப்பர். இப்படி இருப்பவர்களுக்கு இந்த உலகில் நடக்கும் விஷயங்கள் ஏதும் தெரியாது.

ஆனாலும், இந்த பழக்கங்களை ஒரு தேர்ந்த குருவின் முன்னிலையில், அவரின் யோசனைப்படியே செய்ய வேண்டும். புத்தகங்களைப் படித்து விட்டு இதை செய்யக் கூடாது. மூச்சு விடமுடியாமல் சிரமப்படவும் நேரிடும். 

கிரேக்க மொழி வளம்

பழைய ரோமானிய அரசு நிலைகுலைகிறது. கிபி 4ம் நூற்றாண்டில் ரோம அரசின்மீது பல படையெடுப்புகள். என்னசெய்யும் பாவம் இந்த ரோம அரசு. சரிந்தேவிட்டது. பின்னர் இரண்டு பலம்பெறும் அரசுகள் தோன்றின. 1) மேற்கு ஐரோப்பாவில் உருவாகிறது. 2) மற்றது கிழக்கு ஐரோப்பாவில் உருவாகிறது. 1) மேற்கு ஐரோப்பாவுக்கு மிலன் முக்கிய நகராகவும், 2) கிழக்கு ஐரோப்பாவுக்கு கான்ஸ்டான்டைன் நோபிள் முக்கிய இடமாகவும் அமைகிறது. 1) மேற்கு ஐரோப்பாவுக்கு போப் தலைமை தாங்குகிறார், 2) கிழக்கு ஐரோப்பாவுக்கு வேறு ஒரு மதகுரு தலைமை தாங்குகிறார். 1) மேற்கு ஐரோப்பாவில் லத்தீன் மொழியும், 2) கிழக்கு ஐரோப்பாவில் கிரேக்க மொழியும் வேரூண்டுகின்றன.
கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டது. மக்கள் இந்த தேவாலயங்கள் மூலம் பாவத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு மோட்ச வழியை அடையலாம் என்று வெகுவாக நம்பினர். அதற்காக, கிறிஸ்துவின் பிரதிநிதியாக போப் இருப்பதாகவும், எனவே அவரே அதற்கு தலைமையும் தாங்கினார். அவருக்குக் கீழே, ஆர்ச்பிசப், பிசப், குரு என்பவர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு செய்ததால், மக்களும் ஒரே தேவாலயம், ஒரு சமயம் என்று ஒன்றுபட்டனர். மேற்கு ஐரோப்பாவில், ஜெருசலேமை இஸ்லாமியிரிடமிருந்து கைப்பற்ற சிலுவைப் போர்கள் நடந்தன. அதே நேரத்தில், இங்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பானியா போன்ற புதிய அரசுகள் தோன்றிவிட்டன. கான்ஸ்டான்டைன் நோபிளை 1453ல் துருக்கியர் கைப்பற்றினர். எனவே அங்கிருந்த கிரேக்கர்கள் , கிரேக்க பண்டிதர்கள் அனைவரும் குடிபெயர்ந்து மேற்கு நோக்கி சென்றனர். அவர்கள் அவ்வாறு சென்றபோதுதான், தங்களிடமுள்ள பல கிரேக்க, லத்தின் மொழி நூல்களையும் கொண்டு சென்றனர். அப்படிச் சென்றுதான், இத்தாலியில் கல்வியை பரப்பினர். அந்த நூல்களையும் பரப்பினர். இந்த நூல்கள்தான், மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாம். இந்த உலக வாழ்க்கையில் விருப்பத்தையும், மறு உலக நம்பிக்கையையும், உண்மையை ஆராயும் அறிவையும் கொடுத்ததாம். இந்த நூல்கள்தான், அங்குள்ள மக்களை அறியாமை என்னும் இருளில் இருந்து அறிவு என்னும் ஒளியைக் காண்பித்துக் கொடுத்ததாம். இப்படித்தான், எங்கெங்கோ உள்ள மாணவர்கள், இந்த கிரேக்க பண்டிதர்களை சூழ்ந்து கொண்டனர்.