செவ்வாய், 13 அக்டோபர், 2015

ஜூபிடர்

Jupiter ஜூபிடர் என்றால் குரு அல்லது வியாழன். தமிழில் வியாழன். மற்ற எல்லா இந்திய மொழிகளிலும் இவர் பெயர் குரு. Mars என்றால் செவ்வாய். இந்த இரண்டும் சில நேரங்களில் குழப்பிவிடும். Sun, Moon, Mercury, Venus, Saturn, இவைகளை அடையாளம் கண்டுகொள்வதில் பிரச்சனை ஏதும் இல்லை. Jupiter என்று பெரிதாக பெயர் இருந்தால் குரு என்று சிறிதாக இருக்கும். Mars  என்று சிறிய பெயரில் இருந்தால் செவ்வாய் என்று பெரிதாக இருக்கும். சும்மா இப்படி அடையாளம் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்! ஜூபிடர் என்பது ரோமன் மக்களின் ஆகாயக் கடவுளாம். இவர்தான் தலைமை கடவுளும் கூட. இவர் மனைவி பெயர் Juno. இந்த ஜூனோ சொர்க்கத்தின் ராணியாம், Queen of heaven. (heaven என்றால் சொர்க்கம் தானே?) இவர் ஜூபிடர் கடவுளுக்கு மனைவியாக, ராணியாக இருந்தாலும், இவருக்கும் தனி department இருக்கிறதாம். இவர் ஒளி, பிறப்பு, பெண், திருமணம் இவைகளுக்குறிய பெண் கடவுளாம், Goddess. ரோமானியர்களுக்கு இவர்கள்தான் தலைமை கடவுள். Jupiter & Juno.  நம்ம ஊரில் சிவபெருமான்-பார்வதி மாதிரி. இதேபோல, கிரேக்கர்களுக்கும் தலைமை கடவுளும் அவர் மனைவியும் உள்ளனர். உலகம் பூராவும், சாமி இல்லாமல் வாழவே மாட்டார்கள் போல. கிரேக்க சாமிக்குப் பெயர் Zeus. இவரை ஜூஸ் என்றும் ஜீயஸ் என்றும் பலவாறு உச்சரித்துக் கொள்கின்றனர். என் காதில் கேட்டவரை இவரை ‘Zus’ ஜ்(உ)ஸ் என்றுதான் உச்சரிக்கிறார்கள். இந்த கிரேக்க சிவபெருமானின் பெண்டாட்டி சாமி பெயர் Hera. (hir-e) ஹிரே என்று பெயர். இந்த ஜூஸ் சாமிக்கு இந்த ஹிரே மனைவியாக இருந்தாலும், உண்மையில் இவர்கள் இருவரும் அண்ணன்-தங்கை. இவர்கள் மனிதர்களில் முதல் தோற்றம் என்பதால் இந்தக் குளறுபடிகள் உண்டு. அதற்குப்பின் இந்த குழப்பம் எல்லாம் இல்லை. ஆரம்பகால ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வழியில்லையே! மன்னித்துவிடுவோம். Hera, the consort of Zeus.  இராஜா நாட்டை ஆள்வார். இராஜாதான் அதிகாரம் மிக்கவர். அவரின் மனைவி துணைக்கு இருப்பார். இராஜாங்கத்தில் பக்கத்தில் இருப்பார். அவருக்கு இந்த அரசாங்க அதிகாரம் ஏதும் தனியே கிடையாது. இராஜாவின் மனைவி ராணி என்ற அந்தஸ்து மட்டுமே. இப்படிப்பட்ட ராணிகளை Queen Consort என்று சொல்வர். இராஜாவின் மனைவி ராணி, அவ்வளவே. இது இல்லாமல், ராணியாகவே அதிகாரத்தில் இருந்து நாட்டை ஆளும் ராணியும் இருக்கிறார். இப்போது உள்ள பிரிட்டீஸ் எலிசபத் மகாராணி மாதிரி. அவரே நேரடியாக நாட்டை ஆள்வார். அவரின் கணவருக்கு ஆட்சி அதிகாரம் ஏதும் கிடையாது. ராணியின் கணவர் அவ்வளவே. இப்படிப்பட்ட ராணிகளை, நேரடியாக ஆட்சி செய்யும் ராணிகளை Queen Regnant என்பர். ஒரு சில நேரங்களில் மன்னர் சின்ன பையனாக இருப்பார். அப்போதும் இந்த இளவரசரின் தாயார் Queen Regnant ஆக இருந்து ஆட்சி செய்வார். குயின் ரெக்னன்ட். நேரடி ஆட்சி செய்யும் ராணி. Regnum ரெக்னம் என்றால் kingdom என்று லத்தீன் மொழியில். கடவுளின் கட்டளைப்படி ஆட்சி செய்வரை kingship என்று அழைப்பார்களாம். // 

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

சர் வின்ஸன் சர்சில் Sir Winston Churchill

சர் வின்ஸன் சர்சில் Sir Winston Churchill
இவர் இங்கிலாந்தின் (The United Kingdom) பிரதமராக 1951 லிருந்து 1955 வரை இருந்த பிரபலமான பிரதமர்.

இவரைப் பற்றி வேடிக்கையாக ஒரு கதையும் உண்டு. (அது உண்மைதானாம்).

இவர் பிரதமர் பதவியில் இருக்கும்போது, இவருக்கு ஒரு உதவியாளர் இருந்தார். சர்ச்சில் ஆங்கிலப் புலமை மிகுந்தவர். வார்த்தை ஜாலத்துடன் எழுதுவார். இவரைப் போலவே ஆங்கில அறிவு படைத்தவர் இவரின் உதவியாளரும். சர்சிலின் கடிதங்களை தயார் செய்து சரிபார்த்து சர்சிலின் கையெழுத்துக்கு அனுப்புவாராம். சர்ச்சில் அந்த கடிதங்களில் உள்ள சிறு குறைகளை சரி செய்து, பின்னர் தன் கையெழுத்தை போட்டு அனுப்புவாராம். எப்போது கடிதத்தை அனுப்பினாலும், அதில் ஏதாவது ஒரு திருத்தம் செய்து பின்னரே கையெழுத்து போடுவாராம் சர்சில். இது அவரின் உதவியாளருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததாம். எவ்வளவு உன்னிப்பாக படித்து திருத்தி அனுப்பிய கடிதமாக இருந்தாலும், அதிலும் ஒரு குறை கண்டுபிடித்து ஒரு எழுத்தையாவது மாற்றி பின்னர் கையெழுத்துப் போடுவாராம்.

ஒருநாள், ஒரு சிறு கடிதம் தயாரிக்க வேண்டி இருந்தது. இரண்டே வரிகள் கொண்ட கடிதம். மிகக் கவனமாக ஆங்கில வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்த, எந்த இலக்கணப் பிழையும் இல்லாமல், தயாரித்து, அதை சர்ச்சிலின் கையெழுத்துக்கு அனுப்புகிறார் அவரின் உதவியாளர்.
அதைப் பார்த்த சர்சில், ஒரே ஒரு வார்த்தையை மட்டும் மாற்றி எழுதி, தன் கையெழுத்தைப் போட்டு அனுப்புகிறார் சர்ச்சில்.

வந்ததே கோபம் அவரின் உதவியாளருக்கு. நேராக சர்ச்சிலின் அறைக்குப் போகிறார். அந்தக் கடிதத்தைக் காண்பித்து, நான் எழுதிய வார்த்தையில் எந்தக் குறையும் இல்லை, எந்த இலக்கணப் பிழையும் இல்லை. சரியாகத்தானே எழுதி இருந்தேன். இதை ஏன் திருத்தினீர்கள் என்று சற்று கோபமாகவே கேட்கிறார்.

அதற்கு, சிரித்துக் கொண்டே சர்ச்சில் பதில் சொல்கிறார்.
“நீ எழுதிய கடிதத்தில் ஒரு பிழையும் இல்லை; இதுவரை எனக்கு அனுப்பிய எந்தக் கடிதத்திலும் ஒரு பிழையைக் கூட காணமுடியாது. நீ என்னைக் காட்டிலும் ஆங்கிலப் புலமை உள்ளவன் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இந்த என் கையெழுத்து உள்ள கடிதங்களை பார்க்கும் நபர்கள், ஏதோ, இந்த சர்ச்சில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து இடுகிறார். நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டுவிடுவார். கையெழுத்துப் போடுவதைத் தவிர, அதில் உள்ள வாசகங்களை சர்ச்சில் படிக்க மாட்டார் என்று ஊரார் நினைத்து விடக்கூடாது என்பதற்காவே, நான் வேண்டுமென்றே நல்ல எழுதியுள்ள வார்த்தைகளில் ஒரு சில திருத்தங்களை வேண்டுமென்றே என் பேனாவினால் அடித்து எழுதிப் பின்னர் கையொப்பம் இடுகிறேன். அப்படி என் திருத்தங்களைப் பார்ப்பவர்கள், நான் ஏதோ முழுவதும் படித்துவிட்டுத் தான் கையெழுத்தை போட்டேன் என்று நினைத்துக் கொள்வார்கள். அதனால்தான் அப்படிச் செய்தேன். உன்னிடம் நான் எந்த் குறையையும் காணவில்லை” என்று கூறி உள்ளார்.

சிலருக்கு தப்பை கண்டுபிடிப்பதே வேலையாக இருக்கும். அதில் சேர்ந்தவர்போல இந்த சர்ச்சிலும். வேடிக்கையான மனிதர்தான்.
**


புதன், 7 அக்டோபர், 2015

மாயை

"மாயை"

நாரதர், நாராயணனிடம் மாயை பற்றிய விளக்கம் கேட்டார். 

நாராயணன்;- "அதோ அந்த ஆற்றில் நீர் முகந்து வருக, தாக சாந்தி செய்துவிட்டு, மாயை பற்றிப் பேசுவோம்"

நாரதர் ஆற்றங்கரைக்குப் போய், முதலில் அவர் தாக சாந்தி செய்து கொண்டு, பின்னர், கமண்டலத்தில் நீர் முகந்து கொண்டு வரும்போது, ஆற்றங்கரை மணலில் சற்றே தங்கி விட்டுச் செல்லலாம் என்று ஆசையாக இருந்திருக்கிறது. அதை ரசித்துக் கொண்டு இருக்கும்போது, தூக்கம் கண்களை கட்டி சொருகி விட்டது, அயர்ந்து தூங்கிவிட்டார்.

தூக்கத்தில் ஒரு கனவு:-
"திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று பெரிய குடும்ஸ்தனாக ஆகிவிட்டார் நாரதர். ஏராளமான மாடு கன்றுகள் அவரிடம் உள்ளன. வீட்டில் வளர்க்கும் பிரிய பூனைகள் ஏராளம். நாய்கள் ஏராளம். இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஒருநாள், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. எல்லாம் அழிந்துவிடும் போல இருக்கிறது. நாரதருக்கு துக்கம் அதிகமாகிவிட்டது. மணலில் விழுந்து புரண்டு அழ ஆரம்பிக்கிறார். கை கால்களை உதறிக் கத்தி கூக்குரல் இடுகிறார்"

கனவும் முடிகிறது. திடுக்கிட்டு எழுகிறார். 

இவர்  செய்த அமளியில், கமண்டலத்தில் இருந்த நீரைக் கைதட்டிக் கொட்டிவிட்டார். 
மறுபடியும் கமண்டலத்தை எடுத்து நீர் மொண்டுவர செல்கிறார். நீரை எடுத்துக் கொண்டு ஒடுகிறார். ஐயோ! நாராயணனுக்கு தாகம் என்று சொன்னாரே. இப்படி காலதாமதம் செய்துவிட்டேனே! புலம்பல்! 

நாராயணன் இதைப் பார்த்த உரத்த குரலில் சிரிக்கிறார்.

"நாரதரரே! மாயை பற்றி உமக்கு விளங்கி விட்டதா?" என்று கேட்கிறார். 

"ஆம்! நாராயணா! தெரிந்துகொண்டேன் என்று கூறிவிட்டு, இந்த உலகத்தைப் பார்த்து சிரித்தவாறே செல்கிறார் மேல் உலகை நோக்கி.

இந்த நனவும் ஒருநாள் கனவு ஆகும். நனவு, கனவாய் பழங்கதையாய் மறையும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

சனி, 3 அக்டோபர், 2015

நாய் நமதென நரி நமதென

"நாய் நமதென நரி நமதெனப்  பிதா
தாய் நமதென நமன்றன தெனப் பிணி
பேய் நமதென மனமதிக்கும் பெற்றிபோ
லாய்நமதெனப்படும் யாக்கை யாரதே."

உறவுகள் யாரும் இல்லாமல் நோய்வாய்ப்பட்டு தனியாக காட்டில் வழியற்ற நிலை வந்து கிடக்கும் காலத்தில், இந்த உடல் யாருக்கு சொந்தமாகும்?

இந்த உடல் வீட்டில் இருந்தால், தாய் தந்தை தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுவர்;
இந்த உடல் காட்டில் கிடந்தால், நாயும் நரியும் தங்களுக்குச் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடும்;
இந்த உடல் இருட்டில் கிடந்தால், பேய் தனக்குச் சொந்தம் என்று கொண்டாடும்;
இப்படியாக, அவரவர் வாய்க்கு வந்தபடி, இந்த உடலை சொந்தம் கொண்டாடிக் கொள்வர்.
இந்த உடலானது, பிறர் துன்பத்தில் வருந்துவதைப் பார்த்து அவருக்கு உதவி செய்யவே படைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து, இந்த உடலை அதற்காகவே பயன்படுத்துவேன் என்று கருதவேண்டுமாம்;


ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

அரசுப் பள்ளிகள்

அலகாபாத் ஐகோர்ட் ஒரு அதிரடியாக தீர்ப்பை கொடுத்துள்ளதாம். 

எல்லா அரசு ஊழியர்களும் அவர்களின் குழந்தைகளை கண்டிப்பாக அரசு பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டுமாம். தவறினால் அவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். ஆறு மாத கால அவகாசம் கொடுத்துள்ளது ஐகோர்ட். 

இப்போது அங்கு மூன்று வகையான பள்ளிப் படிப்புகள் உள்ளதாம். இங்க்லீஸ் மீடியம் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் என மூன்று வகை உள்ளதாம். 

அரசு ஊழியர்கள் அனைவரும் அவர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால், அரசுக்கு வருமானம் வருவதுடன், கல்வியின் தரமும் தானே உயர்ந்துவிடுமாம். 

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

ஷ்பானிஸ் மொழி (Spanish)

Spanish language
ஷ்பானிஸ் மொழி (Spanish):
இது ஸ்பெயின் நாட்டின் கேஸ்டைல் (Castile region of Spain) பகுதியில் பேசிவந்த மொழி என்பதால் இதை கேஸ்டிலியன் (Castilian) என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். உலக மக்களில் மிக அதிகமாகப் பேசப்படும் மொழி. துல்லியமான கணக்கெடுப்பின்படி, சைனாவின் ‘மாண்ட்ரின் மொழி” க்கு அடுத்து இந்த ஷ்பானிஸ் மொழிதான் பேசப்படுவதாக சொல்லப்படுகிறது. உலக நாடுகளில், சுமார் 20 நாடுகளில் இந்த ஷ்பானிஸ் மொழி பேசப்படுகிறது. 470 மில்லியன் மக்கள் இந்த ஷ்பானிஸ் மொழியை அன்றாடம் பேசி வருகின்றனராம். (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்; 470 மில்லியன் என்பது 47 கோடி மக்கள்). தமிழ்மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை (வெளிநாட்டில் இருப்பவர் உட்பட சுமார் 80 மில்லியன் தமிழ் மக்கள் மட்டுமே. அதாவது 8 கோடி; தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 7.5 கோடி).
பிரான்ஸ் நாட்டுக்கு தெற்கே உள்ள நாடு ஸ்பெயின் நாடு. இதைத்தான் முன்னர் கேஸ்டைல் நாடு என்பர். இங்குள்ளவர்கள் தென்-மேற்கே சென்று தென் அமெரிக்காவை ஆண்டுவந்தனர். ஆகவேதான் தென் அமெரிக்க மக்கள் ஸ்பெயின் நாட்டின் (காஸ்டைல் நாட்டின்) கேஸ்டைல் மொழியான ஷ்பானிஷ் மொழியை பேசிவந்தனர். அதுவே தென்அமெரிக்கர்களின் தாய்மொழியானது.
மெக்ஸிகோ நாடு முழுக்க ஷ்பானிஸ் மொழி பெசும் மக்கள் தான். அமெரிக்காவின் தென்பகுதியில் ஷ்பான்ஸ் மொழி பேசுபவர்கள் அதிகம். அமெரிக்கா செல்லும் தமிழர்களுக்கும் ஷ்பானிஸ் மொழி தெரிந்திருந்தால் நல்லதுதான். பிரான்ஸ் நாட்டிலும் ஒரு 4% மக்கள் ஷ்பானிஸ் மொழி பேசுகிறார்கள்.


அர்ஜென்டினா (Argentina)

Argentina
அர்ஜென்டினா (Argentina):
அமெரிக்க கண்டம் என்பது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்ற இரண்டு நிலப்பகுதிகள். இதில் வட அமெரிக்கா என்பது வடக்கே கனடா நாடும், தெற்கே யு.எஸ்.ஏ. என்ற யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா, சுருக்கமாக ஸ்டேட்ஸ் என்னும் பிரபல்யமான அமெரிக்க நாடும் கொண்டது.
தென் அமெரிக்கா என்பது பல நாடுகள் சேர்ந்த நிலப்பரப்பு. இங்கு பெரும்பாலும் லத்தீன் நாட்டின் மொழியான ஷ்பானிஸ் மொழியே பேசுவதால் இந்த நாட்டை பொதுவாக ‘லத்தீன் அமெரிக்கா’ என்றே செல்லமாக அழைப்பர்.
இந்த தென்அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள நாடுகளில் பெரிய நாடே இந்த அர்ஜென்டினா. உலக நாடுகளில் எட்டாவது பெரிய நாடு இது. கிட்டத்தட்ட 28 லட்சம் கி.மீ. பரப்பளவு கொண்டநாடு. (இந்தியாவின் நிலப்பரப்பு சுமார் 33 லட்சம் கி.மீ கொண்டது). இங்கே முழுக்க முழுக்க ஷ்பானிஸ் மொழி (Spanish) பேசுபவர்கள்தான். ஷ்பானிஸ் மொழி கிட்டத்தட்ட இங்லீஷ் மொழி சாடைதான் இருக்கும்.
அர்ஜென்டினாவை “சில்வர் நாடு” (வெள்ளி தேசம்) என்பர். அர்ஜென்டினா என்ற பெயரே வெள்ளி என்றுதான் பெயர். சில்வரின் கெமெஸ்ட்ரி பெயர் (இரசாயனப் பெயர்) அர்ஜென்டம். வெள்ளி என்பதன் லத்தீன் மொழி அர்ஜென்டம்.
இந்த அர்ஜென்டினாவின் தலைநகர் “பூனஸ் ஏரிஸ்” (Buenos Aires). இது மிகப்பெரிய நகரம்.  இந்தப் பெயரும் இதற்கு வேடிக்கையாகவே வந்தது. பூனஸ் ஏரிஸ் என்ற லத்தீன் வார்த்தைக்கு “ப்யூர் ஏர்” அல்லது “சுத்தமான காற்று” என்று பொருள். ஷ்பானிஸ் மாலுமிகள் இந்த மண்ணுக்கு முதன்முதலில் கப்பல் மூலம் வந்து இறங்கியபொது “நல்ல காற்று அவர்களை இங்கு கொண்டுவந்து சேர்த்தாக” அந்த பெயரையே இதற்கும் வைத்து விட்டார்களாம்!
இந்த நாட்டில் 1810ல் ஏற்பட்ட “மே மாதப் போராட்டம்” சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது. 1816ல் சுதந்திரம் பெற்றது. சூரியன் போட்ட கொடி வைத்துள்ளார்கள். (இந்தியாவில் அந்த இடத்தில் அசோக சக்கரம் இருக்கும்).
அர்ஜென்டினா நாடு, ‘புட்பால்’ என்னும் கால்பந்து விளையாட்டில் உலகப் புகழ் பெற்றது. இதில் சுமார் 125 வருடங்களுக்கு மேலான அனுபவம் கொண்ட நாடு. இருபதுக்கும் மேற்பட்ட உள்நாட்டு குழுக்களைக் கொண்டது. பிபா என்னும் FIFA  என்னும் உலக கால்பந்து விளையாட்டு குழுவிலும் உள்ளது. இரண்டுமுறை கால்பந்து உலகக் கோப்பையும் பெற்றுள்ளது.