"மாயை"
நாரதர், நாராயணனிடம் மாயை பற்றிய விளக்கம் கேட்டார்.
நாராயணன்;- "அதோ அந்த ஆற்றில் நீர் முகந்து வருக, தாக சாந்தி செய்துவிட்டு, மாயை பற்றிப் பேசுவோம்"
நாரதர் ஆற்றங்கரைக்குப் போய், முதலில் அவர் தாக சாந்தி செய்து கொண்டு, பின்னர், கமண்டலத்தில் நீர் முகந்து கொண்டு வரும்போது, ஆற்றங்கரை மணலில் சற்றே தங்கி விட்டுச் செல்லலாம் என்று ஆசையாக இருந்திருக்கிறது. அதை ரசித்துக் கொண்டு இருக்கும்போது, தூக்கம் கண்களை கட்டி சொருகி விட்டது, அயர்ந்து தூங்கிவிட்டார்.
தூக்கத்தில் ஒரு கனவு:-
"திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று பெரிய குடும்ஸ்தனாக ஆகிவிட்டார் நாரதர். ஏராளமான மாடு கன்றுகள் அவரிடம் உள்ளன. வீட்டில் வளர்க்கும் பிரிய பூனைகள் ஏராளம். நாய்கள் ஏராளம். இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஒருநாள், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. எல்லாம் அழிந்துவிடும் போல இருக்கிறது. நாரதருக்கு துக்கம் அதிகமாகிவிட்டது. மணலில் விழுந்து புரண்டு அழ ஆரம்பிக்கிறார். கை கால்களை உதறிக் கத்தி கூக்குரல் இடுகிறார்"
கனவும் முடிகிறது. திடுக்கிட்டு எழுகிறார்.
இவர் செய்த அமளியில், கமண்டலத்தில் இருந்த நீரைக் கைதட்டிக் கொட்டிவிட்டார்.
மறுபடியும் கமண்டலத்தை எடுத்து நீர் மொண்டுவர செல்கிறார். நீரை எடுத்துக் கொண்டு ஒடுகிறார். ஐயோ! நாராயணனுக்கு தாகம் என்று சொன்னாரே. இப்படி காலதாமதம் செய்துவிட்டேனே! புலம்பல்!
நாராயணன் இதைப் பார்த்த உரத்த குரலில் சிரிக்கிறார்.
"நாரதரரே! மாயை பற்றி உமக்கு விளங்கி விட்டதா?" என்று கேட்கிறார்.
"ஆம்! நாராயணா! தெரிந்துகொண்டேன் என்று கூறிவிட்டு, இந்த உலகத்தைப் பார்த்து சிரித்தவாறே செல்கிறார் மேல் உலகை நோக்கி.
இந்த நனவும் ஒருநாள் கனவு ஆகும். நனவு, கனவாய் பழங்கதையாய் மறையும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக