வெள்ளி, 16 அக்டோபர், 2015

சொர்க்கத்தின் கதவு

சொர்க்க கதவைத் திறப்பது:

இன்னவித மாகவுரை யாடியெழி லாரும் 
வன்னமணி வாயில்செறி மாண்கதவு தட்டி 
உன்னிநனி யோலமிட வுள்ளுருகி யுள்ளா 
மன்னுகடை காவலன் மருங்குற வணைந்தே.

இன்ன விதமாக (இந்தவிதமாக) உரையாடி, எழில் ஆரும் (அழகு நிறைந்த) வன்ன மணிவாயில் (பல வண்ண மணிகள் அமைந்த வாயில்) உள்ள கதவைத் தொட்டு; உன்னி நனி ஒலம் இட (இறைவனை நினைத்து மிகவும் உரத்த குரலில் முறையிட; உள்ளாமன்னு (உள்ளே உள்ள) கடைகாவலன் (வாயில் காவலன்), உள்உருகி (உள்ளம் இரங்கி), மருங்கு உற அணைத்து (தேவனின் கட்டளையை நினைத்து),


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக