எனக்குச் சொர்க்க வாசல் திறக்குமா?
வாயில்திற வுண்டிட மலர்ந்தவ னசம்போல்
நேயன்வ தனந்திகழ நேயமொடு நோக்கி
ஆயென வெதிர்தனையெ னையவிவண் செய்ய
தீயன்வர வொல்வதுகொல் யாதுனது சித்தம்.
சொர்க்கத்தின் வாயில் கதவு
திறக்கப்பட்டதும்; மலர்ந்த வனசம் போல்
(மலர்ந்த தாமரை மலரைப் போல); நேயன் வதனந் திகழ
(சொர்க்கத்துக்கு பிரயாணம் செய்யும் விருப்பதுடன் உள்ள); நேயமொடு
நோக்கி (சொர்க்கதின் வாயிற் காவலனை அன்புடன் நோக்கி); ஆயென
எதிர்ந்தனை (என் தாயைப் போல என் முன் தோன்றி); இவண் வெய்ய
தீயன் வர ஒல்வது கொல் (இந்தக் கொடிய பாவி இங்கு வர தகுமா? உன்
விருப்பம் என்ன? என்று சொர்க்கத்தின் வாயில் காவலனைக்
கேட்கிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக