வெள்ளி, 16 அக்டோபர், 2015

எனக்குச் சொர்க்க வாசல் திறக்குமா?

எனக்குச் சொர்க்க வாசல் திறக்குமா?

வாயில்திற வுண்டிட மலர்ந்தவ னசம்போல் 
நேயன்வ தனந்திகழ நேயமொடு நோக்கி 
ஆயென வெதிர்தனையெ னையவிவண் செய்ய 
தீயன்வர வொல்வதுகொல் யாதுனது சித்தம்.


சொர்க்கத்தின் வாயில் கதவு திறக்கப்பட்டதும்; மலர்ந்த வனசம் போல் (மலர்ந்த தாமரை மலரைப் போல); நேயன் வதனந் திகழ (சொர்க்கத்துக்கு பிரயாணம் செய்யும் விருப்பதுடன் உள்ள); நேயமொடு நோக்கி (சொர்க்கதின் வாயிற் காவலனை அன்புடன் நோக்கி); ஆயென எதிர்ந்தனை (என் தாயைப் போல என் முன் தோன்றி); இவண் வெய்ய தீயன் வர ஒல்வது கொல் (இந்தக் கொடிய பாவி இங்கு வர தகுமா? உன் விருப்பம் என்ன? என்று சொர்க்கத்தின் வாயில் காவலனைக் கேட்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக