செவ்வாய், 28 ஜூன், 2016

விசா கொடுக்காதீர்கள்!

விசா கொடுக்காதீர்கள்!
வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால், மறுபடியும் அவரிடமே கடன் வாங்க முடியாது; ஒரு நாட்டில் வசிக்க செல்பவர்கள் அந்த நாட்டில் வசிக்க விசா பெறவேண்டும்; அப்படி விசா வாங்கி அமெரிக்காவில் இருப்பவர்களில் சிலர், கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு சிறை சென்றனர்; அவர்களின் தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யும்போது, அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி விடுவர்; “நல்ல பிள்ளைகளை மட்டும் தங்க அனுமதித்துக் கொண்டு, கெட்ட பிள்ளைகளை அவர்களின் தாயிடமே ஒப்படைப்பது” என்ற நியதிப்படி, தண்டனை அனுபவித்த கெட்ட பிள்ளைகளை அவர்களின் தாய் நாட்டிற்கு திரும்ப அனுப்பி விடுவர்; ஆனால் எல்லாத் தாய்களும் அந்த கெட்ட பிள்ளைகளை திரும்ப பெற்றுக் கொள்வதில்லையாம்; இந்த பழக்கம் இந்தியாவிடமும் உள்ளதாம்;
அமெரிக்காவில் வருடத்திற்கு சுமார் 2000 பேர் விடுதலை ஆகின்றனர்; இவர்கள் எல்லோரும் வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள்; அமெரிக்காவில் குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள்; அமெரிக்க அரசு, இவர்களை அவரவர் தாய் நாட்டுக்கு திரும்ப அனுப்பும்போது, அந்த நாட்டைச் சேர்ந்த அரசுகள் அவர்களை ஏற்றுக் கொள்ளவதில்லையாம்; இதில் இந்திய நாடும் ஒன்றாம்! இப்படிப்பட்ட நாடுகள் மொத்தம் 23 உண்டாம்!!
எனவே அமெரிக்க செனட்டர்களில் ஒருவரான ரிபப்ளிக்கன் செனட்டர் சக் கிராஸ்லி என்பவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், இனிமேல் இந்த நாட்டு மக்களுக்கு இமிகிரேஷன் விசா கொடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம். ஆமாம்! இனி கெட்ட பிள்ளைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் நாடுகளுக்கே இமிக்கிரேஷன் கிடைக்கும்போல! அமெரிக்கா இன்னும் முடிவு எடுக்கவில்லை;
**


திங்கள், 27 ஜூன், 2016

மயிரும் வழுக்கையும்

மயிரும் வழுக்கையும்
பாலூட்டிகளின் உடலில் மயிர் இருக்கும்; பறவைகளின் உடலில் இறகுகள் இருக்கும்; ஊர்ந்து செல்லும் உயிரிகளில் ஸ்கேல் என்னும் செதில்கள் இருக்கும்; ஆனால் இவை எல்லாம் தோலின் அடியில் உள்ள பிளக்கோடு என்னும் கடினமான தோல் அமைப்பான காலம்னார் செல்களில் மூலம் உருவாகும் என அறிந்து கொண்டனர்; ஆனால் இவை முதன் முதலில் எந்த உயிரில் தோன்றியது என்று முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தனர்; இப்போது ஒரு பெரிய ஆராய்ச்சியில் கண்டு கொண்டனர்; இது மூன்னூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரெப்டைல் Reptile என்னும் ஊர்வன உயிரிகள் தான் இதற்கு ஆதாரமாம்! இதுவரை விஞ்ஞானிகள் வேறு மாதிரி நினைத்துக் கொண்டிருந்தார்களாம்; பாலூட்டிகளின் மயிர், பறவைகளின் இறகு, இவைகளுக்கு பூர்வீகம் தெரியாமல் இருந்திருக்கிறார்கள்; ரெப்டைல் இனமான ஊர்வனவற்றுக்கும் பாலூட்டி இனங்களுக்கும், பறவை இனங்களுக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கும் என நினைத்திருந்தார்களாம்! இது உண்மையில்லை என்றும், ஊர்வனவற்றின் அடித்தோலில் இருந்தே, மயிர், இறகு, செதில் தோன்றியது என்று தற்போதைய ஆராய்ச்சி முடிவாம்; காலம்னார் செல் தான் மயிர்களுக்கு காரணம்; இந்த குளறுபடியில் வழுக்கை வருகிறதாம்; இந்த காலம்னார் ஜீன்களின் குளறுபடிதான் வழுக்கைக்கு முழுக் காரணமாம்! தெற்கு கலிபோர்னியாவில் இந்த ஆராய்ச்சி தொடர்கிறது; வெற்றி கிடைத்தால் வழுக்கை இல்லை!
**


காஸ்மாஸ் கம்யூட்டர்

காஸ்மாஸ் கம்யூட்டர்
இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரிது என்றோ, எவ்வளவு நீள-அகலம் என்றோ, என்னென்ன இருக்கிறது என்றோ யாராலும் சொல்ல முடியாது; பிரமாண்டத்திலும் பிரமாண்டம் இந்த அண்டம்; அண்டம், பிரமாண்டம், பேரண்டம்; மனித அறிவுக்கும் அப்பாற்பட்டது! இந்த அண்டத்தில் எத்தனையோ சூரியன்கள்! நட்சத்திரங்கள்! கிரகங்கள்! எது எதைச் சுற்றி வருகிறது என்றே தெரியவில்லை! இந்த நமது சூரியனைச் சுற்றி ஒன்பது கிரகங்கள்! இப்படி எத்தனை கோடி சூரியன்களை எத்தனை கோடி கிரகங்கள் சுற்றி வருகின்றனவோ! ஆனால் இந்த கோடி கோடி சூரியன்கள் என்னும் நட்சத்திரங்கள் எல்லாம் பொதுவாக எதைச் சுற்றுகின்றனவோ புரியாத புதிரே! கேலக்ஸி என்கிறார்கள்! பிளாக் ஹோல் என்கிறார்கள்! சூப்பர் நோவா என்கிறார்கள்! இன்னும் எத்தனையே பெயர்கள் உண்டு! இவை அனைத்தையும் பெயர் சொல்லவும் முடியவில்லை! மனிதன் பெரியவன் என்று நினைத்துக் கொள்கிறான்! ஆனால் அவன் இதில் ஒரு சிறு எறும்பு! இதையெல்லாம்  நினைக்கும்போது, இந்த பேரண்டம், மனிதனை சுற்றியோ, மனிதனை முன் வைத்தோ ஏற்பட்டிருக்க முடியாது; மனிதன், கர்வமாக நினைத்துக் கொள்கிறான், “தனக்காகவே இந்த பேரண்டம் இயங்குகிறது” என்று நினைக்கிறான்! இந்த கர்வமே மனிதனின் வாழ்வை நகர்த்துகிறது!
பேரண்டத்தை அளக்க முடியாதுதான்! ஆனாலும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் இந்த பேரண்டத்தில் என்னென்ன நகர்கிறது என்று ஒரு மேப் தயாரிக்க உள்ளார்; அதை ஒரு மெகா சூப்பர் கம்யூட்டரில் பதிவும் செய்ய உள்ளார்; இந்த பேரண்டத்தில், முடிந்தவரை, என்னென்ன கிரகங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றன என்ற ஒரு வரைபடத்தை ஓரளவுக்காவது தயார் செய்யலாம் என்று நினைக்கிறார், ஆசைப்படுகிறார்; இவருக்கு கேம்பிரிட்ஸ் பல்கலை காஸ்மாலஜி புரபசர் உதவுகிறார்;
ஸ்டீபன் ஹாக்கிங் என்பவர் உலகம் போற்றும் பௌதீக விஞ்ஞானி; இவருக்கு இப்போது 74 வயதாகிறது; இங்கிலாந்து நாட்டவர்; மோட்டார் நியூரான் பாதிப்பால் இவரால் பேச முடியாது; கைகால்களை வீசி நடக்க முடியாது; லேசாக கைகளை மட்டுமே அசைக்க முடியும்; அந்த அசைவைக் கொண்டே கம்யூட்டர் மவுஸ் மூலம் எழுதி, அது பேசுகிறது; ஆனால் இவரின் மூளை மட்டும் மிக அதிகபட்ச வேகத்தில் வேலை செய்கிறது!



ஞாயிறு, 26 ஜூன், 2016

ஐஐடி கராக்பூர் IIT Kharagpur

ஐஐடி கராக்பூர் IIT Kharagpur
இந்தியாவில் முதன்முதலில் தோன்றிய ஐஐடி இதுதான்; 1951ல் கல்கத்தாவிலிருந்து 116 கி.மீ. தொலைவில் உள்ள கராக்பூர் நகரில் தொடங்கப்பட்டது; இந்த ஐஐடியில் என்ஜினியரிங், மேனேஜ்மெண்ட், மெடிக்கல், சட்டம் போன்ற துறைகளில் வல்லுனர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கும் நோக்கில் ஏற்படுத்தப் பட்டுள்ளது; ஐஐடி கராக்பூர் என்பதை IIT KGP என்பர்; இதில் படித்து வெளிவரும் மாணவர்களை KGPians என்றே அழைத்துக் கொள்வர்; 
இந்த நிறுவனம் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது; இதுபோன்ற ஐஐடி நாடு முழுவதும் பல நகரங்களில் உள்ளது; வாரணாசி, புவனேஸ்வர், பாம்பே, காந்திநகர், கவுகாத்தி, ஐதராபாத், இந்தூர், கான்பூர், கராக்பூர், மெட்ராஸ், மாண்டி, பாட்னா, ஜோத்பூர், ரூர்கி, ரோப்பர், தன்பத் போன்ற பல நகரங்களிலும் உள்ளது; ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம் என்னும் ஜெ.இஇ தேர்வுமூலமே இதில் சேர முடியும்; 
இந்த தேர்வுகளை ஆங்கிலத்திலும், ஹிந்தி மொழியிலும் மட்டுமே எழுத முடியும். எனவே மற்ற மொழிகளிலும் எழுத அனுமதி வேண்டும் என குஜராத்தில் ஒரு பொதுநல வழக்கு வந்தது; அதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு வந்தது; அதில் தமிழ்நாட்டில் சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் 12 வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள் என்றும், அதில் 75% மாணவர்கள் தமிழ் வழி பள்ளிகளில் படிக்கிறார்கள் என்றும், எனவே தமிழில் ஐஐடியின் ஜெ.இ.இ. தேர்வை எழுத அனுமதி வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினர் 2012ல் வழக்கு போட்டனர்; தாய்மொழியில் தேர்வு எழுத மறுப்பது என்பது அவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பதாக உள்ளதாக கூறினர்; 
அதே போன்று மும்பாயிலும் மராத்தியில் இந்த தேர்வை எழுத அனுமதி கேட்டு சிவசேனா கட்சியினர் மனு செய்தனர்;  அப்போதைய எச்ஆர்டி அமைச்சரான கபீல்சிபல் அவர்கள் இந்த நிறுவனம் தனித்து இயங்கும் அட்டானமஸ் நிறுவனம் என்றும் அதன் நிர்வாக கொள்கைகளில் அரசு தலையிட முடியாது என்றும் கூறினார்;


வியாழன், 16 ஜூன், 2016

உத்த பஞ்சாப் (Udta Punjab)

 உத்த பஞ்சாப் (Udta Punjab)
உத்த பஞ்சாப் என்று ஒரு சினிமா; இதை வெளியிடக்கூடாது என்று என்.சி.ஓ.க்கள் வழக்கு தொடுத்தன; அதில் போதை உபயோகத்தை சொல்லி உள்ளது என்றும் அது சமுதாயத்துக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் வழக்குப் போட்டது;
இந்த சினிமாவில் சாகித் கபூர், அலியா பட், கரீனா கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
மத்திய சென்சார் போர்டும் இதில் உள்ள காட்சிகளை 13 இடங்களில் வெட்டி விட வேண்டும் என்று சொல்லி உள்ளது; பாம்பே மற்றும் பஞ்சாப், ஹரியான ஐகோர்ட்டுகள் இந்த சினிமாவைத் திரையிடலாம் என்றும் ஒரு ஒரே காட்சியை மட்டும் வெட்டிவிட்டால் போதும் என்றும் சொல்லி உள்ளது; இந்த சினிமாவை வெளியிட்டால், பஞ்சாப்பை பற்றி மோசமாக மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என கருத இடமில்லை என்றும் கோர்ட் சொல்லி உள்ளது; மத்திய சென்சார் போர்டு தேவையில்லாமல் பல காட்சிகளை வெட்டிவிடும்படி கேட்டது தவறு என்றும் கோர்ட் சொல்லி உள்ளது;
இதற்கிடையில் ஒரு என்ஜிஒ நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இந்த சினிமாவை வெளியிடக் கூடாது என்றும், ஐகோர்ட் கொடுத்த உத்தரவுக்கு தடை கேட்டும் மனுச் செய்தது; ஆனால், சுப்ரீம் கோர்ட் பாம்பே ஐகோர்ட்டின் உத்தரவு மீது ஸ்டே கொடுக்க மறுத்து விட்டது; இந்த சினிவைப் பார்க்காமலேயே பாம்பே ஐகோர்ட், அந்த சினிமாவை வெளியிட உத்தரவு கொடுத்ததாக, சுப்ரீம் கோர்ட்டில் மனுச் செய்துள்ளனர்: ஆனால், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட் இந்த சினிமாவைப் பார்த்துவிட்டுத்தான் அதை வெளியிட உத்தரவு கொடுத்துள்ளதாம்;
சினிமாவோ, அதன் கதையோ, அதில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்களோ, சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக மாற்றிவிடும் என்று நம்புவதற்கில்லை! சினிமா என்பதே ஒரு கருத்தைச் சொல்லும் சாதனம் மட்டுமே!



தக்காளி விலை

தக்காளி
தக்காளியின் விலை கிலோ ரூ.100ஐ தாண்டிப் போய்விட்டது; காரணமே தெரியாமல் இதன் விலையானது விண்ணை முட்டிவிட்டது! இன்னும் இரண்டு மாதங்களுக்கு தக்காளியின் விலை குறையாதாம்; அடுத்த விளைச்சல் வந்தால் மட்டுமே விலை குறையுமாம்!
பொதுவாகவே ஜூன் முதல் செப்டம்பர் வரை தக்காளியின் விலை அதிகமாகவே எல்லா வருடங்களும் இருக்குமாம்! இந்த வருடம் திடீரென்று இதன் விலை ஆகாயத்தைத் தொட்டுவிட்டது!
நம்ம ஊர்  மக்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது; அப்போதைக்கு அப்போது காய்கறிகளை வாங்கி சமையல் செய்வது காலம் காலமாகத் தொடர்கிறது; தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கும் காலத்தில், விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என்று அதை கீழே கொட்டுவார்கள்; அதனால் விவசாயிகள், தக்காளியை விவசாயம் செய்ய ஆர்வம் காண்பிப்பதில்லை;
ஆனால், விளையும் தக்காளியை ஜூஸ் வடிவில் சேமித்து பாதுகாத்து, பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் கம்பெனிகளும் இல்லை; இந்த முறை அமெரிக்காவில் உள்ளது; இந்தியாவில் இல்லை; மக்கள் இப்படி பாட்டிலில் இருக்கும் தக்காளி ஜூஸை வாங்கி சமையலுக்கு உபயோகிக்க விரும்புவதில்லை என்ற காரணத்தினாலேயே, கம்பெனிகளும் ஜூஸ் முறைக்கு ஆதரவு தரவில்லை;
மக்கள், சூழ்நிலைக்கு ஏற்க வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள முன் வரவேண்டும்; இப்படித்தான் என் பழக்கம், நான் மாற மாட்டேன் என்று நிலை இருக்கும்வரை, தக்காளிகளின் விலை விண்ணை முட்டத்தான் செய்யும்;


புதன், 16 மார்ச், 2016

இங்கிலாந்து

இங்கிலாந்து
இங்கிலாந்து என்ற நாடு 10-ம் நூற்றாண்டில் உருவானதாம்; அப்போது, அங்கிருந்த மக்களுக்கு பெயர் “ஆங்கில்ஸ்”; அங்குள்ளவர்களை அதனால்தான் “ஆங்கிலேயர்” என்று அழைக்கிறோம்போல! 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே அந்த மண்ணில் மக்கள் வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்; மக்கள் வசிப்பதற்கு தகுந்த மண்ணாகவும், தட்ப-வெட்ப பகுதியாவும், இந்தப் பகுதி இருந்து வந்திருக்கிறது; இங்கிருந்த மக்கள், அதிகமாக ரோமன் மக்களுடன் வியாபாரத் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்; 7 முதல் 10-ம் நூற்றாண்டுகளில், ரோமானியர்கள், இங்கு கிறிஸ்தவ மதத்தை வேகமாகப் பரப்பி விட்டனர்; இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட போர்கள் நடந்தன; ஒரு போருக்கு நூற்றாண்டு போர் என்றே பெயர்; மன்னர்களின் அதிகாரங்களை குறைக்க மேக்ன கார்ட்டா என்ற ஒரு சட்ட உடன்படிக்கையும் ஏற்படுத்தி கொண்டனர்;
1707-ல் இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் இணைந்து ஒரே நாடாக இருக்கலாம் என்று முடிவானது; அதன் பெயர் தான் “யுனிபைடு கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டன்”; 1800-ல் அயர்லாந்தும் சேர்ந்து கொள்ள ஆசைப்பட்டது; இந்த காலக் கட்டத்தில்தான் “இங்கிலாந்து பார்லிமெண்ட்” உருவானது; அப்போது, வெஸ்ட்மின்ஸ்டர் அபே என்ற மாளிகை கட்டப்பட்டது; (The Palace of Westminster Abbey); இங்கு இங்கிலாந்தின் அரசியல் விவகாரம் அலசப்பட்டது; மன்னர் வசிப்பதற்காக தனியே, பக்கிங்காம் பேலஸ் உருவானது; (Buckingham Palace);

**