ஐஐடி
கராக்பூர் IIT Kharagpur
இந்தியாவில்
முதன்முதலில் தோன்றிய ஐஐடி இதுதான்; 1951ல் கல்கத்தாவிலிருந்து 116 கி.மீ.
தொலைவில் உள்ள கராக்பூர் நகரில் தொடங்கப்பட்டது; இந்த ஐஐடியில் என்ஜினியரிங்,
மேனேஜ்மெண்ட், மெடிக்கல், சட்டம் போன்ற துறைகளில் வல்லுனர்களையும், விஞ்ஞானிகளையும்
உருவாக்கும் நோக்கில் ஏற்படுத்தப் பட்டுள்ளது; ஐஐடி கராக்பூர் என்பதை IIT
KGP என்பர்; இதில் படித்து வெளிவரும் மாணவர்களை KGPians என்றே அழைத்துக் கொள்வர்;
இந்த நிறுவனம் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில்
உருவாக்கப்பட்டுள்ளது; இதுபோன்ற ஐஐடி நாடு முழுவதும் பல நகரங்களில் உள்ளது; வாரணாசி,
புவனேஸ்வர், பாம்பே, காந்திநகர், கவுகாத்தி, ஐதராபாத், இந்தூர், கான்பூர்,
கராக்பூர், மெட்ராஸ், மாண்டி, பாட்னா, ஜோத்பூர், ரூர்கி, ரோப்பர், தன்பத் போன்ற பல
நகரங்களிலும் உள்ளது; ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம் என்னும் ஜெ.இஇ தேர்வுமூலமே
இதில் சேர முடியும்;
இந்த தேர்வுகளை ஆங்கிலத்திலும், ஹிந்தி மொழியிலும் மட்டுமே
எழுத முடியும். எனவே மற்ற மொழிகளிலும் எழுத அனுமதி வேண்டும் என குஜராத்தில் ஒரு
பொதுநல வழக்கு வந்தது; அதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு வந்தது; அதில்
தமிழ்நாட்டில் சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் 12 வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்
என்றும், அதில் 75% மாணவர்கள் தமிழ் வழி பள்ளிகளில் படிக்கிறார்கள் என்றும், எனவே
தமிழில் ஐஐடியின் ஜெ.இ.இ. தேர்வை எழுத அனுமதி வேண்டும் என பாட்டாளி மக்கள்
கட்சியினர் 2012ல் வழக்கு போட்டனர்; தாய்மொழியில் தேர்வு எழுத மறுப்பது என்பது
அவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பதாக உள்ளதாக கூறினர்;
அதே போன்று மும்பாயிலும்
மராத்தியில் இந்த தேர்வை எழுத அனுமதி கேட்டு சிவசேனா கட்சியினர் மனு செய்தனர்; அப்போதைய எச்ஆர்டி அமைச்சரான கபீல்சிபல் அவர்கள்
இந்த நிறுவனம் தனித்து இயங்கும் அட்டானமஸ் நிறுவனம் என்றும் அதன் நிர்வாக
கொள்கைகளில் அரசு தலையிட முடியாது என்றும் கூறினார்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக