பெட்ரோலும் குதிரைவண்டியும்!!

இந்தியர்களின் மனநிலையில் உள்ள கோளாறே இந்த பெட்ரோல் செலவு என
ஐரோப்பியர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இந்தியர்கள் கௌரவத்திற்காக கோவணத்தைக்கூட
கழற்றி எறிவார்கள் என்று ஜோதிடமே கூறுகிறார்கள் இந்த ஐரோப்பியர்கள். பெட்ரோல்
அதிகமாக விற்பனையாவதும், தனிமனிதன் வட்டிக்கு அதிகமாக கடன் வாங்குவதும்
இந்தியாவில்தான் அதிகமாம்.
எல்லோருடைய மனநிலையும் சீராகி, குதிரைவண்டியிலும்
போகலாம், அதிலொன்றும் கௌரவம் கழன்று விழுந்துவிடாது என்று நினைக்கும் காலத்தில்
இந்தியா பொருளாதாரத்தில் வலுவடையும் என்கின்றனர். ஆம், உண்மைதான். பெட்ரோல் இல்லாத
வாகனங்களை உபயோகிக்க மறுபடியும் பழகலாம். நேரம் வீணாகும் என்ற கவலை தேவையில்லை. பல
வேலைகளுக்கு நேரமே தேவையில்லை. 5மணிக்கு எழுந்தால் 8மணிக்கு போய்ச் சேரலாம் என்ற
நிலையில் உள்ள இடங்களுக்கு, இப்போதெல்லாம் 7.30க்கு எழுந்து 8மணிக்கு பைக்கில் அவசரமாகச் செல்வது ஒன்றும்
அவசரவேலை என்ற வகையில் சேராது. அறிவுள்ளவர்கள் கலாச்சார மாற்றத்தை கொண்டுவர
முடியும். இளையதலைமுறையினரிடம் மனமாற்றம் தேவை!
Courtesy: Google Images
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக