"ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்"
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்|
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்|
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்|
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!|
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து|
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்|
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
(திருப்பள்ளியெழுச்சி)
பஞ்சபூதங்களில் இருக்கிறான்;
பிறப்பு இறப்பு என்ற வருவதும் போவதும் இல்லாதவன்;
உனது இருப்பை பக்தர்களின் பாடல், ஆடல்களில்தான் பார்க்கிறோம்;
உன்னை யாரும் கண்ணால் கண்டதில்லை;
சிந்தனைக்கும் அப்பாற்பட்டவனே! திருப்பெருந்துறை ஆள்பவனே;
எங்களின் ஏதங்கள் (பாவங்கள்) அறுத்து எங்களை ஆட்கொண்டு ஆண்டருள் புரியவேண்டும்; அதற்காக நீ துயில் நீங்கி எழவேண்டும்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக