வெள்ளி, 16 ஜனவரி, 2015

யார் போலி? Who is the dupe?

Hannah Cowley
ஹன்னா கௌளி என்ற பெண்மணி இங்கிலாந்தில் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாடக எழுத்தாளர், கவிஞர்.

இவர் இங்கிலாந்தில் Devon மாநிலத்தில்  1743ல் ஒரு புத்தக வியாபாரிக்கு மகளாப் பிறந்தார். தாமஸ் கௌளி என்பவருக்கு மனைவியாகி லண்டன் போகிறார். அங்கே கணவர் ஒரு ஸ்டாம்பு அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்க்கிறார். கணவர், கெஜட்டீர் என்ற பத்திரிக்கைக்கும் எழுதுவாராம். பின்னர் இவரின் கணவர்  இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து இந்தியா வந்து விடுகிறார். பின்னர் அவரின் கணவர் இந்தியாவிலேயே இறந்தும் விடுகிறார். லண்டன் திரும்பவே இல்லை. தனது குடும்பச் செலவுகளுக்காக ஹன்னா நாடகக்கதை எழுதுகிறார். கவிதை எழுதுகிறார். அனுபவமில்லாத எழுத்தாளராகவே எழுதிக் கொண்டிருக்கிறார். தனிமையில் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த எழுத்துவெறிகூட வேறு ஒரு சமயத்தில் அசம்பாவிதமாக மனதில் தோன்றியதாம். ஒரு நாடகத்துக்கு போகிறார். அதை பார்த்துக் கொண்டிருக்கும்போது, இதுவிட நன்றாக நாம் எழுதலாமே என்று தோன்றுகிறதாம். அவரின் கணவரோ வேடிக்கையாகச் சிரிக்கிறார். மறுநாள் காலையில் தான் எழுதிய ஒரு சிரிப்பு நாடகக் கதையுடன் கணவர் முன் நிற்கிறார் ஹன்னா. அந்த நாடகத்தை The Runaway நாடக கம்பெனிக்கு அனுப்பிவைக்கிறார். அவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். அதன்பின் தொடர்ந்து நாடகங்களை எழுதுகிறார். அவரின் அடுத்த நாடகம்தான் Who is the dupe? தான் காதலித்தவனையே, தந்தையை தேர்வு செய்ய வைத்து ஏமாற்றிய கதைதான் அது. இது மிகப் பிரபல நாடகமாக 1779 ல் 126 முறை நாடக அரங்கம் ஏறியது.

அவரின் அடுத்தடுத்த நாடகங்கள்;
Albina
The Fatal Falsehood
The Fate of Sparta,
The Belle's Stratagem

பெண்களின் மனதை துல்லியாக வடித்தவர் என்றும், பெண்ணை பிரமண்ட கதாநாயகியாக காட்டாமல் இயல்பான பெண்ணாகவே காட்டி இருப்பார். பெண்களை மதிக்க வேண்டும் என்பதில் அழுத்தம் கொடுத்திருப்பார். அவர்கள் தன் தகப்பனார், கணவர் இவர்களிடம் அழுத்தி வைக்கப்படுவதை எதிர்த்துள்ளார்.

இவர் கவிதை எழுதுவதிலும் வல்லவர்.
இவர் எழுதிய கவிதையே "The Maid of Arragon." 1780ல் எழுதிய கவிதை இது. இவரின் அடுத்த கவிதைத் தொகுப்பு "More Ways Than One" இது ஒரு காமடி கவிதை. 1783ல் எழுதியுள்ளார். இதை இவரின் கணவர் கௌளிக்கு அர்பணித்துள்ளார். கணவர் இந்தியாவிலேயே தங்கிவிட்டார். இந்தியா சென்ற கணவருக்கு இந்த கவிதை அர்பணிப்பு. (இங்கிலாந்து திரும்பாமலேயே இறந்தார்). இந்த கவிதையில் ஒரு பெண்ணை இரண்டு வயதான பணக்காரர்கள் அடைய முயற்சி. கடைசியில், தான் காதலித்தவனை அடைகிறாள். பெண்ணுக்கு பணம் முக்கியமில்லை என்பதை உணர்த்துகிறார். (ஒருவேளை கணவரை நினைத்து எழுதி இருப்பாரோ?).

அடுத்த நாடகம் "A School for Greybeards" ஒரு இளம் பெண்ணை, ஒரு வயதானவர் சீண்டுவது நையாண்டியாக சொல்லப் பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக