குதிரைவண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குதிரைவண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஜனவரி, 2015

பெட்ரோலும் குதிரைவண்டியும்...

பெட்ரோலும் குதிரைவண்டியும்!!
பெட்ரோல் வாகனங்கள் 1980க்கு பின்னரே எல்லா மக்களுக்கும் கிடைத்தன. அதற்குமுன் அது ஒரு ஆடம்பரப் பொருளே. ஆடம்பர பொருள்கள் எல்லாவற்றிலுமே அதை வைத்திருப்பவரின் கௌரவம் அதில் அடங்கி இருக்கும். கௌரவத்திற்கு வைத்திருப்பது வேறு, உபயோகத்திற்கு வைத்திருப்பது வேறு. உபயோகத்தில் இரண்டுவகை. அவசிய உபயோகம். அநாவசிய உபயோகம். இப்போது நாம் வைத்திருக்கும் வாகனங்கள் பலவும் நம்மால் அநாவசியத்திற்கு அதிகமாக உபயோகிக்கப் படுகிறது. 1-ம் நம்பர் வீட்டிலிருந்து 2-ம் நம்பர் வீட்டிற்கு பைக்கில் போவது, அதுபோல், 1-ம்நம்பர் தெருவிலிருந்து 2-ம்நம்பர் தெருவுக்கு காரில் போவது. பெட்ரோல் அதிகம் வாங்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா 2ம்இடத்தில் உள்ளது. வறுமையான நாடு என்பதால் 2-ம்இடம். இல்லையென்றால் முதலிடத்தில் இருந்திருக்கும். 

இந்தியர்களின் மனநிலையில் உள்ள கோளாறே இந்த பெட்ரோல் செலவு என ஐரோப்பியர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இந்தியர்கள் கௌரவத்திற்காக கோவணத்தைக்கூட கழற்றி எறிவார்கள் என்று ஜோதிடமே கூறுகிறார்கள் இந்த ஐரோப்பியர்கள். பெட்ரோல் அதிகமாக விற்பனையாவதும், தனிமனிதன் வட்டிக்கு அதிகமாக கடன் வாங்குவதும் இந்தியாவில்தான் அதிகமாம். 

எல்லோருடைய மனநிலையும் சீராகி, குதிரைவண்டியிலும் போகலாம், அதிலொன்றும் கௌரவம் கழன்று விழுந்துவிடாது என்று நினைக்கும் காலத்தில் இந்தியா பொருளாதாரத்தில் வலுவடையும் என்கின்றனர். ஆம், உண்மைதான். பெட்ரோல் இல்லாத வாகனங்களை உபயோகிக்க மறுபடியும் பழகலாம். நேரம் வீணாகும் என்ற கவலை தேவையில்லை. பல வேலைகளுக்கு நேரமே தேவையில்லை. 5மணிக்கு எழுந்தால் 8மணிக்கு போய்ச் சேரலாம் என்ற நிலையில் உள்ள இடங்களுக்கு, இப்போதெல்லாம் 7.30க்கு எழுந்து 8மணிக்கு பைக்கில் அவசரமாகச் செல்வது ஒன்றும் அவசரவேலை என்ற வகையில் சேராது. அறிவுள்ளவர்கள் கலாச்சார மாற்றத்தை கொண்டுவர முடியும். இளையதலைமுறையினரிடம் மனமாற்றம் தேவை!
Courtesy: Google Images
**