பார்த்தேன் ஆனால் கருத்துச் சொல்ல ஏதுமில்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்த்தேன் ஆனால் கருத்துச் சொல்ல ஏதுமில்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 மார்ச், 2015

video et taceo" ("I see, and say nothing")

video et taceo" ("I see, and say nothing"
பார்த்தேன், ஆனால் கருத்துச் சொல்ல ஏதுமில்லை”
இங்கிலாந்து ராணி 1-ம் எலிசபெத்தின் தாரக மந்திரம் இது;
இவர் 45 வருடங்கள் ராணியாக இருந்தவர்; (1533-ல் பிறந்து 1603 வரை வாழ்ந்தவர்; 1558ல் தனது 25-வது வயதில் இங்கிலாந்தின் ராணி ஆனார்);
45 வருட ராணி இவர்திருமணம் இல்லாமல் கன்னியாகவே இருந்த ராணி (Virgin Queen) எனவும் இவருக்கு செல்லப் பெயர் உண்டு;
இவர் காலத்தில்தான் கடல்வழி படைகளை ஊக்குவித்து, வியாபாரத்தையும் விரிவு படுத்தினார்; இவர் புராடஸ்டன்ட் மதத்தை தழுவினாலும், கத்தோலிக்க மதக் கொள்கைகளையும், ஆங்கிலிக்கன் மதக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டார்; இதுவே இவரின் வெற்றி என்றும் கூறுவர்; அப்போது கெடுபிடியாக இருந்த சர்ச் சட்டம், எல்லோரும் பொது வழிபாடு என்ற புத்தகத்தில் உள்ள (தாமஸ் கிரான்மர் எழுதியது) முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்றும், தவறியவர்களுக்கு தண்டனை உண்டு என்றும் சட்டம்; இதை 1-ம் எலிசபெத் அவ்வளவாக நடைமுறைப் படுத்தவில்லை; கெடுபிடி காண்பிக்கவில்லை; இது மக்களுக்கு பிடித்துப் போய்விட்டதாம்;
டூடர் இனத்தின் கடைசி வாரிசும், ராணியும் இவரே; டூடர் இன (Tudor) 8-ம் ஹென்றியின் மகள் இவர்;
"எப்போது பேச வேண்டும்; எப்போது மௌனமாக இருக்க வேண்டும் என்று நமக்கு தெரிந்திருக்க வேண்டுமாம்" The Knowledge of When to Speak and When to be Silent.
1-ம் எலிசபெத் ராணிக்கு இந்த தாரக மந்திரமாக "நான் பார்த்தேன்; அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்ற மந்திரமே பெயர் வாங்கிக் கொடுத்ததாம்;
நமக்கும் இதுவே பொருந்தும் என்கிறார்கள்; எதைக் கண்டாலும் விமர்சனம் செய்யாமல், பொறுமையாக இருந்தால், அந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்கிறார்கள்; ராணியும் இதையே பின்பற்றி இருந்திருக்கிறார்;