போகபூமி என்பது என்ன?
"விதியுளிப தினாறாண்டுமேவியபன்னீ ராண்டுப்
பதியொடுமனைவி தெய்வப்பத்துப் பூந்தருவும் வேண்டும்
புதியபோகங்கொடுப்பப்புணர்ந்து தாம் பிரியாராகி
மதியொடுமருவுமென்ன வாழ்வது போகபூமி."
பதினாறு வயதுடைய ஆணும், பன்னிரண்டு
வயதுடைய பெண்ணும், பத்துக் கற்பக மரங்களும் வேண்டிய புதிய புதிய
போகங்களை கொடுக்க, அதைப் பெற்று, இருவரும்
புணர்ந்து இன்பம் அனுபவித்து பிரியாது வாழும் பூமியே போகபூமி என்பது.