சீனாவின் பெட்ரோலிய ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீனாவின் பெட்ரோலிய ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

மிதமிஞ்சிய அதிகாரமே ஊழலின் ஆணிவேர் Absolute Power Corrupts Absolutely

சீனாவில் மிகப் பெரிய பெட்ரோலிய ஊழல் அம்பலம் ஆகி உள்ளதாம். சீன தேசிய பெட்ரோலிய கார்பரேஷனில் (CNPC) முன்னர் இருந்துவந்த தலைவர் ஜியாங் ஜீமின் (Jiang Jiemin). இந்த கம்பெனியானது பெட்ரோ சீனா லிமிடெட்-க்கு தாய் (முதன்மை) நிறுவனமும் ஆகும். 

சீனாவின் அதிபர் ஜீ ஜின்பிங் (Xi Jinping). இவர், சீன பெட்ரோலிய நிறுவனங்களை கண்காணித்து ஊழலை ஒழிக்க திட்டமிட்டுள்ளாராம். 

சீனா கம்யூனிஸ்ட் பார்ட்டியின் முன்னாள் தலைவர் ஜோ (Zhou)க்கும் ஊழலில் தொடர்பு என்று ஏற்கனவே சீன அரசு அவரைக் கைது செய்துள்ளது. இப்போது இந்த ஜியாங்கும், அந்த ஜோ-வுடன் ஊழலில் தொடர்பு இருக்கும் என சீன அரசு கருதுகிறதாம்.

"எவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஊழலை தடுத்துவிட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. "Absolute power corrupts absolutely." மிதமிஞ்சிய அதிகாரமே ஒட்டுமொத்த ஊழலுக்கும், கொடுங்கோன்மைக்கும் வழிவகுக்கும். 

இதற்கு தீர்வு ஒன்றே! அது  மக்களின் கையில்தான் உள்ளது. தனிமனித வழிபாட்டை/துதிபாடலை விட்டுவிட்டு, தனிமனித ஒழுக்கத்தை உரிய ஆளுமை குணமாக மக்கள் கருதினால், தலைவர்களும் தனிமனித ஒழுக்கத்துக்குள் வந்துவிடுவர். துதிபாடல் இல்லாத நாட்டில், ஊழல் மிக மிகக் குறைவே!