ஆயிரத்தோரு இரவுகள்:
இதை அரேபிய இரவுகள் என்றும்
சொல்வர். கதைக்குள் கதையாக சொல்லிக் கொண்டே செல்வர்.
இதை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தவர்
சர் பிரான்சிஸ் பர்ட்டான் என்ற ஆங்கிலேயர்.
இதில் ஒரு கதை - அந்த
மூன்று ஆப்பிள்கள் (The Three Apples).
கதை:
அரேபியாவில் ஓடும் டைகிரிஸ்
நதி வெள்ளம் புரண்டு ஒடுகிறது. அதில் ஒரு பெட்டகம் மிதந்து வருகிறது. இதை அந்த நதியில்
மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவன் எடுக்கிறான். அந்த பெட்டகம் வேலைப்பாடு நிறைந்து
இருக்கிறது. அது பூட்டப்பட்டும் இருக்கிறது. அதை அந்த மீனவன் எடுத்து அங்குள்ள ஹாரூன்
என்னும் பெயருடைய அப்பாசித் காலிப் (மதகுரு) அவர்களுக்கு விற்று விடுகிறான். அவர் அந்த
பூட்டை உடைத்து பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து மிரண்டு விடுகிறார்.
ஒரு இளம் பெண்ணை கண்ட-துண்டமாக வெட்டி துணியில் மூடி அந்த பெட்டிக்குள் வைத்து ஆற்றில்
விட்டுள்ளனர். ஹாரூன் அவர்கள் தன் கணக்கப்பிள்ளையான ஜாபர் அவர்களைக் கூப்பிட்டு, இந்த இளம் பெண்ணை கொலை செய்தவர் யார் என்று கண்டுபிடிக்கும்படியும்,
அதையும் மூன்று நாட்களுக்குள் அவர் கண்டுபிடிக்கவில்லை என்றால்,
அவரை தூக்கிலிட்டு விடுவதாகவும் கட்டளை இட்டார். கணக்கப்பிள்ளை பயந்து
கொண்டு, எல்லா இடங்களிலும் விசாரனை செய்து பார்த்து விட்டார்.
ஒன்றும் விளங்கவில்லை. விசாரனையில் தோற்றுப் போய்விட்டார். முதலாளி ஹாரூன் காலிப்,
கணக்கப்பிள்ளையை தூக்கிலிட்டு விடுவார். மூன்று நாளும் முடிந்தது. கணக்கப்பிள்ளையை
தூக்கிலிட உத்தரவிட்டார். அப்போது ஒரு திருப்பம் ஏற்படுகிறது. ஒரு வாலிபரும்,
ஒரு முதியவரும் அங்கு வந்து ஹாரூன் காலிப் முன்னர் நிற்கிறார்கள். அவர்கள்
இருவரும் அந்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொள்கிறார்கள். நான்தான் கொலை செய்தேன் என்று
வாலிபனும், இல்லையில்லை நான்தான் அந்தக் கொலையைச் செய்தேன் என்று
முதியவரும் மாறி மாறி சொல்கிறார்கள். இதில் உண்மையில் யார் இந்த பெண்ணை கொலை செய்தார்
என்று ஹாரூனுக்கு விளங்கவில்லை. இளைஞன் சொல்கிறான், "நான்
சொல்வதுதான் உண்மை, அந்தக் கிழவன் பொய் சொல்கிறார்" என்கிறான்.
கிழவனோ, "நான் தான் இந்தக் கொலையைச் செய்தேன், வாலிபன் பொய் சொல்கிறான்" என்கிறார். ஹாரூன் குழம்பி விட்டார். ஆனால்
வாலிபன், மிகத் தெளிவாக, அந்த பெட்டி எப்படிபட்டது
என்று தெளிவாக வர்ணிக்கிறான். அதில் அந்தப் பெண்ணின் உடல் எப்படி எல்லாம் வெட்டப் பட்டுள்ளது
என்றும் தெளிவாகசச் சொல்கிறான். அந்த இறந்த பெண்ணின் கணவன் தான்தான் என்றும்,
அந்த முதியவர், இறந்த பெண்ணின் தகப்பனார் என்றும்,
மருமகனான என் பெயரில் இரக்கம் கொண்டு அந்த முதியவர், என்னைக் காப்பாற்ற பொய்யாக, தானே கொன்றாத சொல்கிறார்.
அதை நீங்கள் நம்பாதீர்கள், என் மனைவியை நானே கொன்றேன் என்று கூறுகிறான்
அந்த வாலிபன். நம்பும்படியாகவே இருக்கிறது.
அவர்கள் இருவரும் கணவன்
- மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும், அவர்களுக்கு மூன்று குழந்தைகள்
உள்ளதாகவும், அவள் பெயரில் எந்தத் தவறும் இல்லை என்றும் சொல்கிறான்.
அவள் ஒருநாள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாள்; அப்போது,
தனது மிக பிரியமான ஆப்பிள் வேண்டும் என்று கேட்டாள். அந்த ஆப்பிள்,
பசரா நாட்டில் உள்ள காலிப் அவர்களின் தோட்டத்தில் மட்டுமே உள்ளது. மனைவி
பிரியமாக கேட்கிறாளே என்று நானும் பசரா நாட்டுக்கு சென்று காலிப் தோட்டத்தில் இருந்த
மூன்று ஆப்பிள் பழங்களையும் பறித்துக் கொண்டு, பாக்தாத் நாட்டுக்கு
வந்து என் மனைவியிடம் கொடுத்தேன். அவளுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அந்த மூன்று
ஆப்பிள்களையும் அவள் சாப்பிடவில்லை. பக்கத்திலேயே வைத்து விட்டாள். நானும் கடைக்குச்
சென்று என் வியாபாரத்தை கவனித்து வந்தேன். அப்போது அந்த தெருவழியே ஒரு அடிமை போனான்.
அவனிடம் ஒரு ஆப்பிள் இருந்தது. அது பசரா நாட்டின் காலிப் தோட்டத்தில் பறித்தே அதே ஆப்பிள்.
இவனிடம் எப்படி வந்திருக்கமுடியும். என் மனைவியிடம் தானே கொடுத்துவிட்டு வந்தேன் என்று
குழப்பினேன். அந்த அடிமையை கூப்பிட்டு, இந்த ஆப்பிள் உன்னிடம்
எப்படி வந்தது என்று கேட்டேன்; அவனோ, இந்த
ஆப்பிள் பழத்தை அவன் காதலி கொடுத்ததாக சொல்லிவிட்டுப் போனான். அவன் காதலிக்கு அவளின்
கணவன் மூன்று ஆப்பிளை பசரா நாட்டிலிருந்து கொண்டு வந்தானாம்; அதில் ஒன்றை, அவன் மனைவியான என் காதலி எனக்கு கொடுத்தாள்
என்று சொல்லிவிட்டு அந்த அடிமை நகர்ந்தான். எனக்கு கோபம் தலைக்கு ஏறியது; நேராக என் வீட்டுக்குச் சென்று என் மனைவியிடம் நான் விட்டுச் சென்ற ஆப்பிளைப்
பார்த்தேன்; அங்கு இரண்டு ஆப்பிள்கள் மட்டுமே இருந்தது;
நான் அவளுக்கு மூன்று ஆப்பிள்கள் கொடுத்திருந்தேன்; ஆக அந்த ஒரு ஆப்பிளைத்தான் அந்த அடிமை வைத்திருந்தான்; கோபம் உச்சிக்குப் போனது. கத்தியை எடுத்து என் மனைவியைக் கொன்றேன். கொலையை
மறைக்க வேண்டும் எனக் கருதி அவளைத் துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் போட்டு,
ஆற்றில் விட்டுவிட்டேன். அந்த பெட்டிதான் இது; இவளே என் மனைவி;
மறுபடியும் ஒரு திருப்பம்
ஏற்படுகிறது;
ஆற்றில் பெட்டியை எறிந்துவிட்டு
வீட்டுக்கு வருகிறேன்; அங்கு என் மகன் சொல்கிறான்,
"அந்த மூன்று ஆப்பிள்களில் ஒன்றை அவன் திருடினானாம்; அதை கையில் வைத்திருக்கும்போது ஒரு அடிமை அதை தட்டிப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டானாம்;
அந்த அடிமையிடம், இது என் தகப்பனார், பசரா நாட்டில் காலிப் தோட்டத்தில் என் அம்மாவுக்காக கொண்டுவந்தார் என்று சொன்னேன்;
இதில் நான் தான் தவறுதலாக
என் மனைவியை கொன்று விட்டேன்; எனவே ஹாரூன் அவர்களே என்னை
கொல்லுங்கள் என்று கேட்கிறார்;
ஹாரூன், அந்த கணவன் மேலே இரக்கம் கொள்கிறார்; அவனுக்கு தண்டனை
அளிக்கவில்லை; மாறாக, தன் கணக்கப்பிள்ளையைக்
கூப்பிட்டு, இவ்வளவுக்கும காரணம் அந்த அடிமைப்பயல்தானே,
எனவே அவனைப் பிடித்துக் கொண்டுவா என்று கட்டளை இடுகிறார்; நீ, மூன்று நாளைக்குள் அவனை பிடிக்கவில்லை என்றால்,
உன்னை தூக்கிலிட்டுவிடுவேன் என்றும் கட்டளை இடுகிறார்; மூன்று நாள் முடிந்து விட்டது; கணக்கப் பிள்ளையால்,
அடிமையை கண்டுபிடிக்க முடியவில்லை; கணக்கப்பிள்ளையை
தூக்கிலிட நேரம் குறித்து விட்டார்; சாவது உறுதி; எனவே கணக்கப் பிள்ளை தன் சொந்த பந்தகளை அழைத்து விடைபெறுகிறார்; தன் மகளை அழைத்து பாசத்தோடு கட்டிப்பிடிக்கிறார்; அப்படி
கட்டிப்பிடிக்கும்போது, தன் மகள் அணிந்துள்ள சட்டையில் உள்ள பையில்
ஒரு பொருள் தட்டுப்படுகிறது; அது ஒரு ஆப்பிள்; ஓ! பசரா நாட்டு காலிப் தோட்டத்து, காணாமல் போன அதே ஆப்பிள்!
அந்த பெண் சொல்கிறாள்,
"இந்த ஆப்பிளை ஒரு அடிமையிடமிருந்து வாங்கிதாகவும், அவன் பெயர் ரேகன் என்றும், அவனே அந்த பெண்ணின் தகப்பனான,
கணக்கப்பிள்ளையின் அடிமை என்றும் தெரிய வருகிறது.
கணக்கப்பிள்ளை, தன் எஜமானரிடம், தன் அடிமைதான் இந்த குழப்பத்துக்கு காரணம்
என்றும், அவனை மன்னித்து விடும்படியும், அதற்கு பிராயசித்தமாக, தான் ஒரு கதை சொல்வதாகவும் சொல்கிறார்.
அந்தக் கதையே "நூருதீன் அலியும் அவர் மகன் பதர் அல்தின் ஹாசனும்" என்ற வேறு
ஒரு கதை.
இப்படி ஆயிரத்து ஒரு இரவுகளுக்கும்
கதைகள் உள்ளன.