வெள்ளி, 3 ஏப்ரல், 2015

புருஷார்த்தம் Goals of Life

மகாபாரதத்தின் யுத்தம் 18 நாட்கள் நடந்ததாக அந்த போரை வர்ணித்திருப்பர்; அதில் படைபலம், மன்னர், தளபதிகளின் வீரம் சிறப்பு போன்ற எண்ணற்ற பெருமைகளை சொல்லியிருப்பர்; வியாசர் எழுதிய மகாபாரதம் ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டது; ஒரு ஸ்லோகம் என்பது இரட்டை வரிகளைக் கொண்டது; அப்படியானால், வரிக்கணக்கில் 2 லட்சம் வரிகள்; இதில் பல கிளைக் கதைகள் இருப்பதால் (கதைக்குள் கதையாக) இவ்வளவு பெரிதாக இருக்கிறது; சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது; ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார், "கலியுகம் தொடங்கி விட்டது; மக்கள் எப்படி வாழ வேண்டும் என்று புருஷதர்மத்தை Goals of Life சொல்வதற்காக இந்த மகாபாரதக் கதை ஏற்பட்டது" என்கிறார்; கலியுகம் தொடங்கி இப்போது 5,000 ஆண்டுகள் ஆகி விட்டது; அதன்படி இந்த கதை நடந்து 5,000 ஆண்டுகள் ஆகி இருக்கலாம் அல்லது அதற்கு பின்னர் நடந்திருக்கலாம்; கதை எழுதப்பட்ட காலம், எப்போது என்று தெரியவில்லை; வியாசர் பழைய சமஸ்கிருத மொழியில் (பாணினி மொழியில்) விநாயகருக்குச் சொல்லச் சொல்ல, விடாமல் எழுதியதாகச் சொல்கிறார்கள்; பின்னர் மறுபடியும், அர்ஷூனின் கொள்ளுப்பேரன் ஜனமேஜயன் மன்னருக்கு, வியாசரின் சிஷ்யன் வைஷாம்பயனா சொன்னதாக சொல்கிறார்கள்; அதன்பின்னரே வெளி உலகுக்கு மகாபாரதம் அறிமுகமாகி இருக்கலாம்; 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக