வெள்ளி, 3 ஏப்ரல், 2015

ஆப்ராம் என்னும் ஆப்ரகாம்

பைபிள் வழி மூதாதையர்கள் இந்த மூன்று பேரும், ஆப்ரகாம் (ஆப்ராம்), அவர் மகன் இஸ்மாயிலும், ஐசக்கும், ஐசக்கின் மகன் ஜேக்கப் (இஸ்ரேல்);
யூதகலாச்சாரம் ஏற்படுவதற்கு இவர்களே மூதாதையர் என்றும் சொல்வர்;
ஆப்ராம் என்கிற ஆப்ரகாம்;
முதல் மனிதன் ஆதாம் முதல் ஆப்ரகாம் வரை 10 மூதாதையர்கள் இருந்திருக்கின்றனர்; இந்த முதல் 10 பேர், பெரும் வெள்ளப் பெருக்கு வருவதற்கு முன்னர் வாழ்ந்த வழிதோன்றல்கள்; (மீதி 10 பேர் வெள்ளப் பெருக்குப் பின் வாழ்ந்த வழித் தோன்றல்கள்); இதில் 10-வது வழித்தோன்றலே ஆப்ராம் என்று அழைக்கப்பட்டு பின்னர் ஆப்ரகாம் ஆனவர்; இவரின் கனவில் கடவுள் வந்து "நீ உன் தகப்பன் சாரா-வின் வீட்டிலிருந்து வெளியேறி, கானான் நாட்டுக்குப் போ; அங்கு கானான் மக்கள் வசிக்கிறார்கள்; அங்கு உன் வழித்தோன்றல்களை உருவாக்கு;" என்கிறார்; ஆனால் கானான் நாட்டில் பெரிய பஞ்சம் ஏற்படுகிறது; எனவே கானான் நாட்டை விட்டு அதன் தெற்குப் பகுதியான எகிப்துக்கு போகிறார்கள்; ஆப்ராமின் மனைவி பெயர் சாராய்; இவளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை; எகிப்தியரைப் பார்த்து பயந்து, சாராய் என் தங்கை என்று கணவனே பொய் சொல்லி வாழ்ந்து வருகிறார்; மனைவி என்றால், தன்னைக் கொன்றுவிட்டு மனைவியை அவர்கள் எடுத்துக் கொள்வார்களாம்; எகிப்து நாட்டை ஆண்ட மன்னர் பேர்ரோ Pharaoh (இது மன்னனின் தனிப்பெயர் இல்லை; எகிப்தை ஆளும் மன்னர்களின் பட்டப் பெயர் இது); சாராய் பெண் வந்திருப்பது அந்த எகிப்து நாட்டு இளவரசனுக்கு தகவல் தெரிந்துவிட்டது; வரச் சொன்னான்; ஆப்ரகாமுக்கு மாடுகளும், கழுதைகளும், ஒட்டகங்களும், வேலைக்காரர்களும், ஏராளமாகக் கொடுத்தான் இளவரசன்; ஆனால் கடவுள், மன்னனின் இளவரசனையும், அவன் செல்வங்களையும் அழித்தான்; இளவரசனுக்கு காரணம் தெரியவில்லை; காரணத்தை தேடும்போது, சாராய் என்ற பெண் திருமணம் ஆகாதவள் இல்லை; அவள் ஆப்ராமின் தங்கையும் இல்லை; உண்மையில் ஆப்ராமின் மனைவிதான் இந்த சாராய் என்று தெரியவருகிறது; கோபம் வந்து, ஆப்ராமிடம் கொடுத்த எல்லாவற்றையும் திரும்ப ஒப்படைத்து விட்டு ஓடிவிடும்படி கூறினான் இளவரசன்; எனவே ஆப்ராம், தன் ஆடுமாடுகளுடன் ஹெப்ரான் நாட்டுக்கு (பாலஸ்தீன நாடு) வந்துவிடுகிறார்; அவர் தம்பி மகன் "லாட்" என்பவனின் குடும்பத்தை பசுமையான ஜோர்டன் நாட்டுக்கு அனுப்பி விட்டார்; ஜோர்டான் நாட்டுப் போரில், ஆப்ராமின் தம்பி மகன் லாட்டை சிறைப் பிடித்து விட்ட செய்தி ஆப்ராமுக்கு தெரியவருகிறது; ஆப்ராம் தன் கூட்டத்தை இரண்டு பிரிவாக்கி, அந்த நாட்டை தாக்கி, தம்பி மகனை விடுவிக்கிறார்; ஜோர்டான் போரில் தோற்ற சோடோம் மன்னன், ஆப்ராமைமிடம் நட்பாக ஆகிவிட வருகிறான்; வரும்போது, ரொட்டியும், ஒயினும் கொண்டு வருகிறான்; ஆப்ராமின் கனவில் கடவுள் தோன்றி, உன் மக்களை இந்த மண்ணில் பெருக வைப்பேன் என்கிறார்; ஆனால் ஆப்ராமின் மனைவியோ பிள்ளை இல்லாமலேயே இருக்கிறார்; எனவே மனைவியின் எகிப்திய வேலைக்காரி மூலம் ஆப்ராமுக்கு குழந்தை பிறக்க ஏற்பாடாகிறது; அந்தக் குழந்தை இஸ்மாயில்; குழந்தை பிறந்தவுடன் அந்த வேலைக்காரி, எஜமானி சாராயை மதிப்பதில்லை; எனவே வேலைக்காரியை விரட்டி விடுகிறார்; போகும்வழியில் ஒரு நீரூற்றுக்கு அருகில், அந்த வேலைக்காரிக்கும் அவள் குழந்தைக்கும், தேவதை தோன்றி, திரும்பி வரும்படியும், உன் மகன் மூர்கன்போல வருவான் என்று சொல்கிறது; ஆப்ராமுக்கு வயதாகி விட்டது; இப்போதுதான் அவர் பெயர் ஆப்ரகாம் என்றும், மனைவியின் பெயர் சாராய் என்பதை சாரா என்றும் கடவுள் மாற்றி விட்டுஅவரின் மனைவிக்கு மகன் பிறப்பான் என்றும் கடவுள் சொல்கிறார்; (I'll give thee a son also of her.); இப்போதுதான், கடவுளின் ஆணைப்படி, தனக்கும், மகன் இஸ்மாயிலுக்கும் (13 வயது) சுன்னத் செய்து கொள்கிறார்; ஆப்ரகாம் பிலிஷ்டைன் பகுதியில் (கஜா பகுதி) வசிக்க செல்கிறார்; அங்குள்ள மன்னன் அபிமேலக் இவர்களை விசாரனைக்கு அழைக்கிறான்; அங்கு ஆப்ரகாம் தன் மனைவி சாராவை தங்கை என்று சொல்கிறார்; மன்னனின் கனவில் கடவுள் தோன்றி, நீ, சாராவை அடைய திட்டமிட்டால் உன் நாட்டை இழப்பாய் என்றும் அவள் ஆப்ரகாமின் மனைவி என்றும் எச்சரிக்கிறார்; மறுநாள், ஆப்ரகாமிடம், 'ஏன் என்னிடம் பொய் சொன்னாய்' என்று அரசன் கேட்கிறான்; அவரும் "உண்மையில் இவள் என் சகோதரிதான்; என் தந்தையின் மகள்; ஆனால் இவள் என் தாயின் மகள் இல்லை; அதனால் எனக்கு மனைவி ஆனாள்;" என்று விளக்கம் அளிக்கிறார்; அங்குள்ள ஒரு கிணற்றுக்கு சண்டை வருகிறது; ஆப்ரகாம் ஆட்களுக்கும், பிலிஷ்டைன் (கஜா) மன்னனின் ஆட்களுக்கும்; ஆட்டுக் குட்டிகளுக்கு தண்ணீர் இறைப்பதில் பிரச்சனையாம்;
ஆப்ரகாமுக்கு சாரா மூலம், முதன் முதலில் கடவுள் சொன்னபடி, ஒரு மகன் பிறக்கிறான்; அவனுக்கு "ஐசக்" என்று பெயர் வைத்து, அவனின் 8 வயதில் அவனுக்கும் சுன்னத்தும் செய்து விடுகிறார்; ஒரு விருந்து நடக்கிறது அதில் மூத்த மகன் இஸ்மாயில், இந்த பெரியம்மா கிழவியாகி ஐசக் மகனை பெற்றதற்காக கேலி செய்கிறான்; இதை கணவனிடம் சொல்லி மூத்த மகன் (வேலைக்காரியின் மகன்) இஸ்மாயிலை விரட்டிவிடும்படி கேட்கிறார்; என் மகன் ஐசக்குடன் அவன் பங்குக்கு வரக்கூடாது என்றும் சொல்கிறார்; ஆப்ரகாமுக்கு வருத்தமாகி விட்டது; கடவுளிடம் இதற்கு தீர்வு சொல்லும்படி கடவுளை வேண்டுகிறார்; "கவலைப்படாதே, உன் மனைவி சொல்லியபடியே செய், ஒன்றும் ஆகாது" என்று கடவுள் சொல்கிறார்; "ஐசக் மூலம் உன் வம்சத்தை உருவாக்குவேன், அவன் உனது வாரிசு; என்றும், இஸ்மாயில் மூலம் ஒரு தேசத்தை உருவாக்குவேன், அவனும் உன் இரத்த வாரிசே; என்றும் கடவுள் ஆப்ரகாமிடம் ஆறுதலாகச் சொன்னார்; மறுநாள் இஸ்மாயிலையும் அவன் தாயையும் பொருள்களை கொடுத்து வெளியே அனுப்பி விட்டார்; காடுகளில் அழைந்து திரிந்து கடவுளை வேண்டி அழுதனர்; ஒரு தேவதை தோன்றி, 'உங்களுக்கு என்றே தனி நாட்டை உருவாக்குவேன்' என்று கூறியது; பின்னர் தான் பிறந்த எகிப்து மண்ணில் தன் மகன் இஸ்மாயிலுக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்து விடலாம் என்று கருதி பெண்தேடினார்;
இதற்கிடையில், ஆப்ரகாம் கனவில் கடவுள் தோன்றி, உன் மகன் ஐசக்கை எனக்கு பலி கொடு என்று கேட்டார்; அதை அப்படியே ஏற்று, மகனைக் கூப்பிட்டுக் கொண்டு மலை ஏறினார்; அங்கு மகனை பலி கொடுக்க தயாரானபோது, தேவதை தோன்றி "உன் மகனை விட்டுவிடு; அதற்குப் பதிலாக ஒரு ஆட்டை பலி கொடு" என்று சொல்லியது; கடவுள் சொன்னதை நம்பிய ஆப்ராகாமுக்கு நிறைய செல்வத்தையும் மக்கள் கூட்டத்தையும் கொடுத்தாராம் கடவுள்;
ஆப்ரகாமின் மனைவி சாரா இறக்கிறார்; அதற்குபின்னும் ஒரு பெண்ணை துனைவியாக வைத்துக் கொள்கிறார்; அவருக்கு 6 மகன்கள் பிறக்கிறார்கள்; 175 வருடம் வாழ்ந்து பின்னர் ஆப்ரகாம் இறக்கிறார்;
யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இவர்கள் அனைவருக்கும் இந்த ஆப்ரகாம்தான் மூதைதையர் என்கிறார்கள்;
ஆப்ராகாமின் ரத்த வழி வந்தவர்களை யூதர்கள் என்றும்;
ஆப்ராகாமின் கடவுள் நம்பிக்கையைக் கைக் கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும்;
ஆப்ரகாம் என்பவர் (ஆதாம் முதல், பின்னர் வந்த முகமது நபிகள் வரை  வந்த) கடவுள் தூதர் என்று மூஸ்லீம்களும் ஏற்றுக் கொண்டார்கள்;


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக