புதன், 31 டிசம்பர், 2014

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!

“வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” – திருப்பாவையில் வரும் வரிகள்.
விடிவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த வெள்ளி முளைக்கும். இதுவே “விடிவெள்ளி”. Morning Star. பூமியைப் பார்த்து இருக்கும் வானத்தில் இரவு முழுக்க வியாழன் என்னும் ஜூபிடர் பிரகாசித்து இருக்கும். ஆனால் வெள்ளி மிகப் பிரகாசமானது. இந்த வெள்ளி என்னும் வீனஸ் விடியலுக்கு இரண்டரை மணி நேரத்துக்கு முன்னரே, சூரியன் வருகிறது என்பதை முன்அறிவிப்பது போல மின்னிக் கொண்டிருக்கும். ஆனால் சூரியன் இருக்கும் திசைக்கு எதிரே இந்த வியாழன் என்னும் ஜூபிடர் இருக்கும். எனவே விடியற்காலை நான்குமணிக்கு வியாழன் என்னும் ஜூபிடர் மேற்கே மறைய ஆரம்பிக்கும்போது, கிழக்கு வானத்தில் வெள்ளி என்னும் வீனஸ் மின்னிக் கொண்டிருக்கும். இது மார்கழி மாதத்தில் மட்டுமே வெகு கச்சிதமாக இருக்கும் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. இதைத்தான் “வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்று திருப்பாவை வெகு அழகாக நினைவூட்டுகிறது.

புல்லின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கில்லிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தோலோர் எம்பாவாய்! – திருப்பாவை.

இந்த வெள்ளி ஒரு கிரகமே, நட்சத்திரமல்ல. ஆனாலும், செல்லமாக இதை விடிவெள்ளி Morning Star என்போம். வெள்ளியே Venus கிரகம். இது பூமியின் சுற்றுப்பாதைக்கு உள்ளே இருப்பதாலும், சூரியனை ஒட்டியே சுற்றிவருதாலும் இது சூரியன் உதிக்கும்போதும், சூரியன் மறையும்போதும் பளிச்சென்று தெரியும். விடிவதற்கு முன்னரே தெரியும் வெள்ளியை விடிவெள்ளி morning star என்றும், சூரியன் மறைந்த ஒரு மணி நேரத்தில் அந்திவான இருட்டில் தெரியும் அந்திவெள்ளியை evening star என்றும் செல்லமாக அழைக்கிறோம். (ஜூன் மாதத்தில் இரண்டரை மணி நேரம் கழித்தே தெரியும்). இரவு ஆரம்பிக்கும்போதும் இது மின்னும். இந்த குழப்பத்தாலேயே நம் மூதாதையர்கள் இதை இரண்டு தனித்தனி நட்சத்திரங்கள் என்றே வெகுகாலம் கருதிவந்தனர். கடிகாரத்தின் அறிமுகம் இல்லாத நம் மூதாதையர்கள் விடியலை இந்த விடிவெள்ளி எழுவதைக் கொண்டே கணக்கிட்டனர். விடியற்காலை நான்கு மணிக்கு இந்த பிராகாசமான கிரகம் ஒரு நட்சத்திரம்போல வெகு அழகாக மின்னிக் கொண்டிருக்கும். விடியப் போவதன் அடையாளம் இது. இந்த அனுபவம் கிடைக்காதவர்கள், காலை நான்கு மணிக்கு எழுந்து பார்க்கவும். கிரேக்கர்கள், காலையில் உதிக்கும் வெள்ளியை(morning star) ‘வெளிச்சத்தை கொண்டுவருபவர்’ (Phosphoros) என்றும், அந்திவெள்ளியை(evening star) ‘அந்தியைக் கொண்டு வருபவர்’ ‘Hesperos’ என்கின்றனர். பிரகாசத்தில் சூரியனே மிகப் பிரகாசமானது; அதற்கு அடுத்த பிரகாசம் நிலாவுக்கு; அதற்கடுத்த பிரகாசமானது இந்த வெள்ளியே; அதற்கடுத்து சிறிது பிராகசமானது புதன்; சூரியனைச் சுற்றிவர இந்த வெள்ளி எடுத்துக்கொள்ளும் காலஅளவு 225 நாட்கள். புதன் சுற்ற எடுத்துக் கொள்ளும் காலஅளவு 88 நாட்கள். பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஒரு வருடம் தேவை. எட்டுவருடத்தில் பூமி, சூரியனை 8 முறை சுற்றும்; ஆனால் இந்த எட்டு வருடத்தில் வெள்ளியானது சூரியனை 13 முறை சுற்றிவந்திருக்கும். இதை கொண்டு சில ஜோதிடர்கள் வெள்ளிக்கு 13 எண் என்றும், பூமிக்கு 8 எண் என்றும் கணக்கிட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறு பூமியும், வெள்ளியும் சுற்றிவருவதில், இந்த வெள்ளியானது எட்டு வருடத்தில் இந்த தனது 13 சுற்றுக்களில், இது பூமியை 5 முறை கடந்து சென்றிருக்குமாம். இந்த கணக்கின்படி, சூரியனை வெள்ளி சுற்றிய 5 வருடங்கள் 5x584=2920 நாட்கள். அதேபோல், சூரியனை பூமி சுற்றிய 8 வருடங்கள் 8x365=2920 நாட்கள். இந்த 8/5 கணக்கை கண்டுபிடித்தே ‘மாயன்கள்’ அவர்களின் பிரபலமான ‘மாயன் காலண்டரை’ உருவாக்கி உள்ளனராம். {இதேபோல், புதன் கிரகம் சூரியனைச் சுற்றிவர 88 நாட்கள் எடுத்துக் கொள்ளும். இது சூரியனை நேரில் சந்திக்க 115.88 நாட்கள் ஆகும். பூமி, சூரியனை 7 முறை சுற்றும் காலத்தில், புதன், சூரியன் 22 முறை சுற்றி இருக்கும். இதன்படி 22/7 கணக்கான “பை” Pi கணக்கும். (ஒரு வட்டத்தின் சுற்றளவு அதன் விட்டத்தின் இந்த கணக்கின்படியே அமையும் என்பது சூத்திரம். அதாவது விட்டத்தின் 3.14 மடங்குதான் அந்த வட்டத்தின் சுற்றளவு.) பூமியின் ஏழு வருடத்தில், புதன் கிரகமானது சூரியனை 22 முறை சுற்றிஇருக்கும்.} ஆர்வம் இருப்பர் நெட் உலகில் சஞ்சரிக்கவும்...

**

1 கருத்து:

  1. இது பைந்தமிழ் இலக்கிய சான்று
    அறிவியல் சான்று, தேடுகின்றவர்கள் கொடுக்கவேண்டும். அதுபோல அந்த மார்கழி மாதத்தில்தான் பூமிக்கருகில் ORION belt வரும். அதற்க்கும் மார்கழி ஏகாதசி, சொர்க்கவாசல், பின்னர் தைமாத சூரிய அயன மாற்றம், தை ரதசப்தமி இதற்க்கெல்லாம் ஒரு நேர்கோட்டு தொடர்புண்டு. மத சம்பந்தமில்லாமல் ஆராயவேண்டும்.

    பதிலளிநீக்கு