ரிஷப இராசியும் ஜீஸ் கடவுளும்
ஜீஸ் கடவுள்(Zeus) கிரேக்க இதிகாசத்தில் ‘கடவுள்களின் தந்தை’ என்று குறிப்பிடப்படுபவர்.
இவருக்கு பல மனைவிகள் உண்டு. இந்த மனைவிகள் மூலமே பல கடவுளைப் பெற்றுள்ளார். தனியே
பல கடவுள்களை உருவாக்கியும் உள்ளார். ஈரோப்பா (Europa) என்ற
அழகியே இவரின் முதல் மனைவி என்றும் சொல்வர். இந்த ஈரோப்பா அழகியின் பெயரைக் கொண்டே
‘ஐரோப்பா கண்டம்’ பெயரிடப்பட்டுள்ளதாம். இந்த ஈரோப்பா அழகியை, கதாநாயகன் ஜீஸ்
கடவுள், ஒரு காளைமாடு வேடத்தில் வந்தே கவர்ந்து சென்றதாக கிரேக்க இதிகாசம்
சொல்கிறது. ஒரு வெள்ளை காளைமாடாக தன்னை உருமாற்றிக் கொள்கிறார். ஈரோப்பா இருக்கும்
பகுதிக்குச் செல்கிறார். ஈரோப்பா, அங்கு தன் தந்தையின் பசுமாடுகளை மேய்த்துக்
கொண்டிருக்கிறாள். அந்த பசுக்கூட்டத்தில், இந்த ஜீஸ் கடவுள் காளைமாடு வேடத்தில்
உள்ளே புகுகிறார். காளைமாடு திமில் மிக அழகாக ஆடிக் கொண்டிருக்கிறது. ஈரோப்பா
அதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு, அந்தக் காளைமாட்டை நெருங்கி அதன்
திமிலைப்பிடித்து மயங்கி அதில் மேலேறி அமர்கிறார். அந்த மயக்கத்திலேயே ஈரோப்பாவை,
அந்த காளைமாடு கடத்திக் கொண்டு கடலுக்குள் நீந்திச் சென்று அந்த பெண் உடலுடன்
ஏமாற்றிக் உறவு கலக்கிறார். அவளுக்கு நிறைய பரிசுகளும் தருகிறார். ஏமாற்றித்தான்
அந்த அழகி ஈரோப்பாவை அடைகிறார். இந்த காளைமாட்டின் அடையாளமாக வானத்தில் காளைமாடு
போன்று வடிவில் இருக்கிறார். இதுவே ரிஷப ராசி மண்டலம். ரிஷபம் என்பது காளைமாடே.
இந்திய காலச்சாரத்தில், சிவன் காளைமாட்டுடன் இருப்பதாகவே சொல்லப் படுகிறது. ஒருவேளை,
சிவன்தான் இந்த கிரேக்க ஜீஸ் கடவுளா? காதலுக்கு காளைமாடு ஒரு அடையாளமோ? விஞ்ஞானபூர்வமாக,
இந்த கிரேக்க ஜீஸ் கடவுளுக்கு, ரோமானியர் வைத்த பெயர் ஜூபிடர். இந்த ஜூபிடர்
கிரகத்தைச் சுற்றி வரும் நிலவுக்குப் பெயர்தான் இந்த ஈரோப்பா. ஒருவேளை விஞ்ஞானத்தை
விளங்கவைக்க இந்த கிளுகிளுப்பு கதையை சொல்லிவைத்தார்களோ!
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக