
மேக்னட்டை வேகமாகச் சுற்றி அதில்
கரண்ட் எடுத்த முதல் முயற்சி, நமக்குத் தெரிந்து, சைக்கிள் டைனமோ. டயரில்
தேய்த்துக் கொண்டு வேகமாகச் சுத்தும் மேக்னட் இரும்பில் மின்சாரம் வருகிறது. அது
முன்பக்கம் உள்ள பல்பை எரியச் செய்கிறது.
(ஒரு மின்காந்தம் என்னும் மேக்னட் இரும்பை மிகவேகமாகச் சுழலச்
செய்தால் அதிலுள்ள அயனிக் பொருள் அதிலிருந்து வெளியேறும். அதில் மின்சாரம்
இருக்கும். அதை எந்த பொருளிலாவது செலுத்தினால் அங்கு மின்சார ஓட்டம் இருக்கும்.
அதுவே நாம் உபயோகிக்கும் மின்சாரம்.)
இந்த முறையை அடிப்படையாகக் கொண்டு, இந்த உலகம் முழுவதும்
பலவகைகளில் மின்சாரத்தை “தயாரிக்கிறார்கள்”. ஆக மின்சாரம் தயாரிக்க, ஒரு மேக்னட்
வேகமாகச் சுத்தவேண்டும், அவ்வளவே! நிலக்கரியை எரித்து, நீரை ஆவியாக்கி, அந்த ஆவியை
ஒரு பிஸ்டன் பம்புக்குள் அனுப்பினால், அது மேலும் கீழும் சுத்தும். (ரயில் எஞ்சின்
சுற்றுவதுபோல) அதில் மேக்னட்டை இணைத்தால் அது சுற்றும். மற்றொரு முறை, ஆயில்
எஞ்சினை இயக்கி அதில் மேக்னட்டை இணைக்கலாம். மற்றொரு முறை, நீர்வீழ்ச்சியில் ஒரு
உருளையில் தண்ணீர் விழும்படி செய்தால், அது வேகமாகச் சுற்றும். அதில் மேக்னட்டை
இணைக்கலாம். மற்றொரு முறை, அணுவில் உள்ள ஒரு புரோட்டானை எடுத்தால், அது மிக அதிக
வெப்பத்தை கக்கும். அந்த வெப்பத்தை ஒரு பாய்லரில் உள்ள நீரை கொதிக்கவைத்து, அந்த
நீராவியை பிஸ்டன் பம்புக்குள் அனுப்பினால் அது மேலும் கீழும் சுத்தும். அதில்
மேக்னட்டை இணைத்தால் அதிலிருந்து மின்சாரம் கிடைக்கும்.
ஆக இவை எல்லாவற்றிலுமே ஒரு
மேக்னட் வேகமாகச் சுற்றுகிறது. அதில் மின்சாரம் கிடைக்கிறது. அவ்வளவு எளிமையான
முறையில்தான் கடவுள் காண்பித்துக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மேக்னட்டை
சுற்றவைப்பதற்குத்தான் நாம் பலகோடி செலவு செய்ய வேண்டியுள்ளது. இதைத்தான்
விஞ்ஞானிகள் ஒரு சுழற்சிமுறை என்கிறார்கள். அதாவது சுற்றவைக்கும் சக்தியிலிருந்து
மேக்னட் சக்தி கிடைக்கிறது; மேக்னட் சக்தியிலிருந்து மின்சார சக்தி கிடைக்கிறது;
மறுபடியும் அந்த மின்சார சக்தியிலிருந்து சுற்றவைக்கும் சக்தி கிடைக்கிறது. இது
ஒரு வட்டவடிவ முறையில் உள்ளது. From
Mechanical Energy to Magnetic Energy; From Magnetic Energy to Electric Energy:
then again, from Electric Energy to Mechanical Energy; இப்படி
இருக்கும்போது, கிடைத்த மின்சாரத்தையே அதன் ஒருசிறு பகுதியை மறுபடியும் மேக்னட்டை
சுற்ற பயன்படுத்தலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. அதை யாரும் முயற்சிக்கவில்லையா?
இல்லை இது சாத்தியமில்லை என்று விட்டுவிட்டார்களா? ஆராய்ச்சி செய்கிறார்களா என்று
தெரியவில்லை.
இதைப் புரிந்துகொண்டு யாரேனும் ஆராய்ச்சி செய்து அதில் வெற்றி
கிடைத்தால், கண்டிப்பாக அவருக்கு நோபல்பரிசு கிடைப்பதுடன், இந்த பிரபஞ்சத்திற்கு வெளிச்சம்
கொடுத்த மனிதன் என்ற பெருமையும் கிடைக்கும் என்றே நம்புகிறேன். நானும் மூளை அளவில்
முயன்று கொண்டுதான் இருக்கிறேன்.
**