மீன் எதனால் உயிர் இழக்கும்?
"சுவையின்மீனளிநாற்றத்திற்றும்பியே பரிசந்தன்னில்
நவையிலாவசுணந்தானே நல்லிசை தனிற்பதங்கம்
உவகையாமொளியை வேட்டேயுயிரினை யிழக்குமைந்தாம்
இவையெலாமுடையோர் தம்பாலா ருயிரழந்திடாதார்."
மீன் தன் சுவையினால் உயிர் இழந்துவிடும்;
வண்டு நாற்றத்தினால் உயிர் இழந்துவிடும்;
தும்பி தொடுவதால் உயிர் இழந்துவிடும்;
அசுணமா(?) இசையினால் உயிர் இழந்துவிடும்;
விட்டில்பூச்சி ஒளியினால் உயிர் இழந்துவிடும்;
இவை எல்லாச் சுவைகளையும் உடையவர் (விரும்புபவர்) உயிர்இழப்பது உறுதிதானே!
ஐம்புலன்களையும் அடக்கவேண்டுமாம்!