செவ்வாய், 5 ஜனவரி, 2016

வீரம் சொல்லி வருவதில்லை!

சண்டிகாரில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சின்னப் பையன், பெயர் மெகந்திரதா, 13 வயதுதான் ஆகிறது;

தன் தாயின் கழுத்தில் ஒரு கேடி கத்தியை வைத்து மிரட்டும் போது, மகன் எப்படிப் பொறுமை காப்பான்; ஆவேசத் துணிச்சலில் அந்த கத்தியை தன் கையாலேயே பறித்து எறிந்த துணிச்சலுக்கான வீரப் பதக்கத்தை பிரதமரிமிருந்து பெறுகிறான், இந்திய குடியரசு தினத்தில்;

National Bravery Award 2015 by the Indian Council for Child Welfare.

Creche கிரீச்

Creche கிரீச்கள் கட்டாயமாம்

லேபர் மினிஸ்டிரி இந்த கட்டாய கிரீச் முறையை கொண்டு வந்துள்ளதாம்; 50 தொழிலாளர்கள் இருக்கும் நிறுவனம் அல்லது 30 பெண்கள் பணிபுரியும் நிறுவனம் இவைகளில் கட்டாயம் ஒரு கிரீச் என்னும் பகல்நேர குழந்தை பராமரிப்பு நிலையத்தை வைத்திருக்க வேண்டுமாம்;

500 மீட்டர் இடைவெளியில் உள்ள பல நிறுவனங்கள் சேர்ந்தும் ஒரு கம்யூனிட்டி கீரீச் வைத்துக் கொள்ளலாமாம்; 

பஞ்சம்

பஞ்சம் இன்னும்தான் தலைவிரித்து ஆடுகிறது; இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சம்; 15 ஆயிரம் கிராமங்கள் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனவாம்; மத்திய அரசு இதற்கு நிதி உதவியாக ரூ.3,049 கோடி கொடுக்க தீர்மானித்துள்ளதாம்; மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், இதுவரை மகாராஷ்டிரா பெற்ற நிவாரண நிதியில் இதுதான் அதிகம் என்கிறார்:

இதேபோல், மற்ற மாநிலங்களிலும் பஞ்சம் உள்ளது;
மத்திய பிரதேசத்துக்கு நிதி உதவி: 2033 கோடி
கர்நாடகாவுக்கு நிதிஉதவி 1540 கோடி
சட்டீஸ்கர்க்கு 1,275 கோடி